சிபிஎம் ரசீது வழங்கும் பேரவை
குடவாசல், மே 21- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றிய அலுவலகத்தில் கட்சிஉறுப்பினர்களுக்கு ரசீது வழங்கும் பேரவை நடைபெற்றது. பேரவைக்கு கட்சியின் குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.லெட்சுமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றி கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
திருத்துறைப்பூண்டி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைப்பூண்டி ஒன்றியம் மற்றும் நகரக்குழு சார்பில் கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கும் பேரவைக் கூட்டம் செவ்வாயன்று திருத்துறைப்பூண்டி மங்கை மஹாலில் நடைபெற்றது. பேரவைக்கு நகரக்குழு செயலாளர் கே.ஜி.ரகுராமன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.சுப்ரமணியன், எஸ்.சாமிநாதன், எம்.பி.கே.பாண்டியன் மற்றும் ஒன்றியக்குழு, நகரக்குழு உறுப்பினர்கள், கட்சி கிளை செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
உலக மனச்சிதைவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
அறந்தாங்கி, மே 21-புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் உலக மனச்சிதைவு தினத்தை முன்னிட்டு ஸ்கார்ப் இந்தியாமனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆவுடையார்கோவில் ரோட்டரி சங்கம் இணைந்து ஆவுடையார் கோவில் மீமிசல் முக்கம் பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாயன்று மனநலம் மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. ஆவுடையார்கோவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கே.அண்ணாத்துரை, பி.பழனிமுருகன், எம்.பாண்டியன் மற்றும் ஆவுடையார்கோவில் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் மனநோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள், மனநோய் வரக்காரணம், மனநோய்களின் வகைகள் பற்றியும், அதனை குணப்படுத்த மருத்துவம் உண்டு என்றுசமுதாய ஒருங்கிணைப்பாளர் குணச்செல்வி எடுத்துரைத்தார். முன்னதாக எம்.அம்பிகா வரவேற்றார். கே.ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
கோடை உழவு செய்வது குறித்து வேளாண் அதிகாரி விளக்கம்
தஞ்சாவூர், மே 21-கோடை உழவு செய்வதன் அவசியம் பற்றி பேராவூரணிவேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:“கோடை உழவு செய்தால், கோடி நன்மை உண்டு”என்ற உலகச்சொல் உண்டு. ஆம்! கோடை உழவு செய்வதற்கு இதுவே ஏற்ற தருணம். கோடை மழையினை பயன்படுத்தி கோடை உழவு செய்வது மிகவும் அவசியமாகும். முதலில் வயலை இரும்பு கலப்பை கொண்டோ (அல் லது) டிராக்டர் கொண்டோ குறுக்கும், நெடுக்குமாக ஆழமாக புழுதி பட உழவு செய்ய வேண்டும். இவ்வாறு கோடையில் உழவு மேற்கொள்வதால் புல், பூண்டுகள் வேர் அறுந்துகருகி விடுகிறது. கடினத் தன்மையுள்ள மண் கட்டிகள் உடைந்து மண் பொலபொலப்பு தன்மை அடைகிறது. பயிர் பருவ காலங்களில் சில வகை பூச்சிகளின் புழுக்கள்மண்ணுக்குள் சென்று, கூண்டுப் புழுவாக மாறி பேரிச்சங் கொட்டை போன்ற உருவத்தில் மண்ணுக்கடியில் வளர்ந்துகொண்டிருக்கும். கோடை உழவு செய்வதன் மூலம் இவ்வகை கூண்டுப்புழுக்கள் மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டுஅவை பறவைகளால் பிடித்து தின்று அழிக்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த பயிர் சாகுபடியின் போது பூச்சிகளின்தாக்குதல் வெகுவாக குறைகிறது.களைச்செடிகள் முற்றிலும் அழிக்கப்படுகிறது. மண் ணில் நீர் பிடிப்புத் தன்மை பெறுகிறது. இதனால் பெய்யும்மழை பூமிக்குள் சென்று மண்ணில் ஈரப்பதம் காக்கப்படுகிறது. மண்ணின் பௌதீக தன்மை மேம்படுகிறது. நாற்றங்கால் மற்றும் நடவு வயல் தயாரிப்பு மிகவும் எளிதாகிறது. மண் பொலபொலப்பு தன்மை பெறுவதால் அடுத்த பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிருக்கு நாம் இடும்உரம் சமச்சீராக கிடைத்து, வேர் வளர்ச்சி தூண்டப்படுவதுடன் பயிர் செழித்து வளர்கிறது. மண்ணில் அங்கக உயிரினங்களின் பெருக்கம் பலமடங்கு பெருகி மண் நயம்மேம்படுகிறது. இதனால் மகசூல் கூடுதலாக கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் அனைவரும் தவறாதுகோடை உழவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள் ளப்படுறார்கள்”இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.