சீர்காழி, ஜூலை 2- சீர்காழி அருகே கடவாசல் கிராமத்தில் 8 ஆண்டுகளாக செயல்படாத மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே கடவாசல் ஊராட்சி காந்தி நகரில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு 10 ஆண்டு ஆகிறது. சில மாதங்கள் மட்டுமே செயல்பட்ட சுகாதார வளா கம் பின் திடீரென மூடப்பட்டு 8 ஆண்டுக்கும் மேல் பயன்பாடின்றி கிடக்கிறது. 25 கழிவறை, குளியலறை, நீர்த்தேக்கத் தொட்டி, மோட்டார் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப் பட்ட இந்தக் கட்டிடம், அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பயன்பட்டு வந்தது. தற்போது இந்த சுகாதார வளாகம் எந்த பயனுமின்றி பூட்டியே கிடக்கிறது. எனவே அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தை கள் நலன் கருதி இந்த மகளிர் சுகாதார வளாகக் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.