tamilnadu

ஜூலை 3 திருச்சியில் 100 இடங்களில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 30- திருச்சி மின்வாரிய அனைத்து தொ ழிற்சங்க கூட்டம் மன்னார்புரத்தில் உள்ள சிஐ டியு அலுவலகத்தில் திங்களன்று நடை பெற்றது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மின்சாரத்தை தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தம் 202- ஐ திரும்பப் பெற  வேண்டும். மின்வாரிய ஊழியர்கள் அனைவ ருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.  மின்வாரிய ஊழியர்கள், பொது மக்களை தாக்கும் காவல்துறை மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். பல மாதங்க ளாக மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்ப டாமல் நிலுவையில் உள்ள பண பலன்களை  உடனே வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட டிஏ,  சரண்டர் உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். மின் ஊழியர்களுக்கு கொ ரோனா பாதுகாப்பு கவசங்கள், நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கி, 50 லட்சம் காப்பீடு வழங்க வேண்டும். கொரோனாவை பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கை விட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோ ரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 3 அன்று  தென்னூர், மன்னார்புரம், ஸ்ரீரங்கம் ,லால்குடி  முசிறி, துறையூர், மணப்பாறை உட்பட மின்வா ரிய பிரிவு அலுவலகங்களின் கோட்ட அலுவ லகங்களில் திருச்சி பெருநகர் வட்டத்தில் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு  செய்யப்பட்டது.