tamilnadu

img

‘பள்ளி மாணவி உயிரிழப்பில் உரிய விசாரணை வேண்டும்’

பெற்றோர், மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

கரூர், நவ.13- கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதி யில் செயல்படும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுபதி பாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் கோமதி (17). இவர் இப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.  கடந்த திங்கள்கிழமை காலை 8.40 மணிக்கு பள்ளிக்கு சென்றுள் ளார். அப்போது பள்ளி வளாகத்தி லேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயி ரிழந்தார் என ஆசிரியர்கள் கூறு கின்றனர். பெற்றோர், மகள் உயி ரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத் தில் ஈடுபட்டனர்.  இதனையறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி தலைமை யில், நகரச் செயலாளர் எம்.ஜோதி பாசு, மாவட்டக்குழு உறுப்பினர் கள் எம்.தண்டபாணி, ஆர்.ஹோச்சு மின், வாலிபர் சங்க நகர செயலாளர் ராஜா ஆகியோர் உயிரிழந்த மாணவி கோமதியின் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை மாலை நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

பணம் கேட்டு தொந்தரவு

பின்னர் மாணவி கோமதியின் தயார் ராஜேஸ்வரி எங்களிடம் கூறுகையில், ‘எனது மகள்  பள்ளி யில் மயங்கி விழுந்துவிட்டாள் என்று மட்டும்தான் தகவல் சொன்னார் கள். உயிர் இருந்ததா? இல்லையா? என்று சொல்லவில்லை. பள்ளியில் இருந்து அவளை ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர். 108 ஆம் புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதது ஏன்?. மேலும் பள்ளியில் நோட்ஸ் வாங்கு வதற்கு ரூ.500 கேட்கிறார்கள். அதனால் பணம் வேண்டும் என கோமதி கேட்டாள், என்னிடம் பணம் இல்லாததால் பிறகு கொடுக் கிறேன் என்று கூறினேன்.  பள்ளியில் கடந்த 2 நாட்களாக பணம் கேட்டு ஆசிரியர்கள் தொந்த ரவு செய்துள்ளனர். மேலும் மற்ற மாணவிகள் முன்னிலையில் அவ மானப்படுத்தியுள்ளனர். இதனால் மன வேதனையடைந்து என்னிடம் கூறினாள். நான் பள்ளிக்கு வந்து பணம் தருகிறேன் என்று கூறி பள்ளி க்கு அனுப்பி வைத்தேன். இறந்த மகளின் முகத்தை கூட பார்க்கவிட வில்லை. என்னை மருத்துவ மனைக்கு வெளியில் நிற்க வைத்து விட்டு ஆசிரியர்கள் மட்டும் உள்ளே சென்றனர். எங்களிடம் காவல்துறை யினர் மிரட்டி கையெழுத்து வாங்கி யுள்ளனர். எங்களது அனுமதி இல்லாமலே உடற்கூராய்வு செய் துள்ளனர். பின்னர் உடனடியாக உடலை எடுத்துச் செல்லுங்கள் என காவல்துறையினர் மிரட்டினர்.  எனது மகளை ஆசிரியர்கள் அடித்துள்ளனர். அதனால் தான் என் மகள் இறந்துள்ளார். ஆறுதல் கூற கூட ஆசிரியர்கள் யாரும் வர வில்லை. சக மாணவிகளையும் அனுப்பவில்லை. என் மகள் இறப்பில் சந்தேகம் உள்ளது. எனவே பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது உரிய விசாரணை செய்து தக்க நட வடிக்கை எடுத்திட வேண்டும். மீண்டும் இது போல் எந்தவித சம்பவ மும் நடக்கக் கூடாது என்றார் வேதனையுடன்.

சிபிஎம் வலியுறுத்தல்

மாணவியின் பெற்றோர்களை சந்தித்து விசாரணை செய்தததின் அடிப்படையில் மாணவி கோமதி யின் இறப்பின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு பள்ளி நிர்வாகத்தின் மீது கோட்டாட் சியர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு மாணவியின் மர ணத்தின் உண்மை நிலையை வெளி கொண்டு வரவும், இதன் மீது உரிய நடவடிக்கையும் எடுத்திட வேண்டும். மேலும் மாணவியை இழந்து வாடும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.