tamilnadu

img

தஞ்சை திருக்காட்டுப்பள்ளியில் விளைநிலங்கள் ஊடாக புறவழிச் சாலை அமைக்கக் கூடாது

தஞ்சாவூர், ஜூலை 19- திருக்காட்டுப்பள்ளியில் விளை நிலங்கள் ஊடாக புறவழிச்சாலை அமைக்கக் கூடாது என விவசாயிகள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா திருக்காட்டுப்பள்ளி நகரில் நில வும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் நெடுஞ்சாலைத் துறை புறவழிச்சாலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்த புற வழிச்சாலை விளைநிலங்கள் ஊடாக செல்வதால், இதற்கு இப்பகுதி விவ சாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர்.  இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினரும், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவருமான வழக்கறிஞர் வெ.ஜீவகுமார் தலைமையில், ஏரா ளமான விவசாயிகள் மாவட்ட வரு வாய் அலுவலர் ந.சக்திவேலிடம் அளித்த கோரிக்கை மனுவில், திருக் காட்டுப்பள்ளியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக விவசாய நிலங் களின் வழியாக சாலை அமைக்க முயற்சி நடந்து வருகிறது. இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத் தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வரு கின்றனர்.  இந்த விளை நிலங்களில் பல தலை முறைகளாக விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடும் வறட்சியிலும் 90 அடியில் நிலத் தடி நீர் கிடைக்கிறது. காவிரி, குட முருட்டி மூலம் நேரடி நீர்ப்பாசனமும் செய்யப்படுகிறது. குடமுருட்டி தலை மதகில் இருந்து தனி வாய்க்கால் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ 70 லட்சம் மதிப்பீட்டில் வெட்டப்பட்டு தண்ணீர் கொண்டு வரப்பட்டு விவசாயம் நடை பெற்று வருகிறது. தண்ணீர் இல்லாத காலங்களில் ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி நடைபெறும். நெல், கரும்பு, வாழை இவற்றுடன் கோடை சாகு படியில் உளுந்து, பயிறு ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. 

திருக்காட்டுப்பள்ளி சுற்றுச் சாலை அமைக்க மனுதாரர் நிலம் அருகி லேயே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு நிலம் உள்ளது. அகரப்பேட்டையில் காவிரியில் கோணங்கடுங்கலாறு இந்த சாகுபடி இடத்திற்கு அருகிலேயே உள்ளது. இதன் ஆற்றங்கரை தான் இப்பொழு தும் போக்குவரத்து சாலையாக பயன்படுகிறது.  எனவே இச்சாலையை சுற்றுச் சாலைக்காக விரிவுபடுத்தலாம். இத னால் தனியார் நிலம் கையகப்படுத்து தலும், அதற்கு அரசு இழப்பீடு தருவதும் ஆன செலவு மிச்சமாகிறது. மேலும் கோணங்கடுங்கலாறில் செல்லும் சாலையை செப்பனிட்டால், வேளாண் இடு பொருட்களையும், உற்பத்தி பொருளையும் கொண்டு செல்ல போக்குவரத்துக்கு ஏற்றதாக அமை யும். இதன்மூலம் ஒன்பத்துவேலி  மைக்கேல் பட்டி, கண்டமங்கலம் ஆகிய கிராமங்களில் சாகுபடிக்கான தேவைகளும் வசதி பெறும்.  இது காவிரி விவசாயத்திற்கு பெரி தும் பயன்படும். இந்த விவசாயி களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது. எந்த நிலத்தில் வேண்டுமானாலும் சாலை அமைக்க முடியும். ஆனால் நஞ்சை நிலத்தில் மட்டும் தான் விவசாயம் செய்ய முடி யும். எனவே இப்பிரச்சனையில் நெடுஞ் சாலை துறை அதிகாரிகளின் முடிவு தவ றானது. சட்ட விரோதமானது. இது குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே நிலத்தை கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்” என கூறப் பட்டுள்ளது. அப்போது, விவசாயிகள் பத்மநாதன், கிருபானந்தன், சர வணன், மோகன், கலியமூர்த்தி ஆகி யோர் உடனிருந்தனர்.