திருச்சிராப்பள்ளி, ஆக.26- வருமானவரி வரம்புக்குள் வராத ரேசன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.7500 வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்ட த்தில் 200 நாட்கள் வேலையும் ரூ. 600 கூலி வழ ங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டி த்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயி ரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி
காட்டூர் பகுதிக்குழு அரியமங்கலம் உக்கடை கிளை சார்பில் செயலாளர் செல்வராஜ் தலை மையிலும், திருவெறும்பூர் ஜெய்நகரில் ஒன்றிய க்குழு உறுப்பினர் ரவி தலைமையிலும், காந்தலூர் கிராமத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் ராம மூர்த்தி தலைமையிலும், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக சிபிஎம் கட்சி கிளை சார்பில் தீரன் நகரில் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலை மையிலும், மின்அரங்க கட்சி கிளை சார்பில் தென்னூர் அண்டகுண்டன் பகுதியில் மின் அரங்க கிளைசெயலாளர் சீனிவாசன் தலை மையிலும், ஸ்ரீரங்கம், திருவானைக்காவலில் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் வேளாங்கண்ணி தலைமையிலும், மலைக்கோட்டை கிளை சார்பில் சின்னக்கடை வீதியில் பகுதிக்குழு உறு ப்பினர் இளங்குமரன் தலைமையிலும் நடை பெற்றது. மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டக்குழு உறுப்பினர் ஷாஜகான், வாலி பர் சங்க மாவட்ட தலைவர் பாலு, செவலூரில் வட்ட க்குழு உறுப்பினர் சீனிவாசன், கரட்டுப்பட்டியில் வட்டக்குழு உறுப்பினர்கள் கண்ணன், கரு ப்பையா, பாரதியார் நகரில் வட்டக்குழு உறுப்பி னர்கள் சுரேஷ், தங்கராஜ், புத்தாநத்தத்தில் வட்ட க்குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமையில் போ ராட்டம் நடைபெற்றது. தா.பேட்டை பிள்ளாத்துறையில் சேகர், தூயா நத்தத்தில் வீரவிஜயன், மேட்டுப்பாளையத்தில் கோவிந்தசாமி, பாப்பாபட்டியில் மனோகரன், தும்பலத்தில் செந்தில்நேரு ஆகியோர் தலைமை யிலும், மருங்காபுரி வட்டத்தில் யாகபுரம் ஒத்த க்கடை, கல்லுப்பட்டியில் பாறைப்பட்டியிலும் போ ராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வட்டக்குழு உறுப்பினர்கள் அழகர்சாமி, முருகே சன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் ஒன்றியம் வல்லத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.மாலதி, பார்வதி, அந்தோணி, அய்யாசாமிப்பட்டியில் மாவட்டக்குழு உறுப்பினர் கே.அபிமன்னன், மாத்தூரில் பிரி ட்டோ, ராஜ்மோகன், மானோஜிப்பட்டி- தெற்கு பூக்கொல்லையில் முத்துச்சாமி, வனரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வன துர்கா நகரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகரம் பெரிய கோயில் கிளைச் செயலாளர் எம்.வடிவேல் தலைமையில் , சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், பூக்காரத் தெருவில் வசந்தி தலைமையிலும், கீழவாசலில் கிளைச் செயலாளர் நமச்சிவாயம் தலைமையி லும், திருவோணம் ஒன்றியம் வெட்டுவாக்கோ ட்டையில் விதொச ஒன்றியத் தலைவர் பாஸ்கர் தலைமையிலும், தோப்பநாயகத்தில் வி.ச ஒன்றி யத் தலைவர் முருகேசன் தலைமையிலும், அன ந்தகோபாலபுரம், கொள்ளுக்காட்டில் மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராமசாமி தலைமையிலும், ஊர ணிபுரத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.கோ விந்தராஜூ தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
பேராவூரணி
பேராவூரணி பெரியார் சிலை அருகில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமாரசாமி தலைமை யிலும், இதேபோல் ஆவணம், திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக் கோட்டை, கொல்லைக்காடு, செரு வாவிடுதி, பூவாளூர் அண்ணாபுரம் ஆகிய இட ங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டு க்கோட்டை தலைமைத் தபால் நிலையம் அருகே கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையிலும், கரம்பயத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம் தலைமையிலும், வீர க்குறிச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் பெஞ்ச மின் தலைமையிலும், உதயசூரியபுரத்தில் ஒன்றி யச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையிலும், துவரங்குறிச்சி முக்கூட்டுச்சாலை, தாமர ங்கோட்டை, தம்பிக்கோட்டை வடகாடு ஆகிய இட ங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஒன்றி யச் செயலாளர் எஸ்.கந்தசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஏ.கோவிந்த சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுக்கூர்
மதுக்கூர் ஒன்றியம் இளங்காட்டில் அய்யாவு தலைமையிலும், வாட்டாக்குடி தெற்கில் எஸ்.சுப்பிரமணியன் தலைமையிலும் நடைபெற்றது. ஒரத்தநாடு, புதூர் ஆகிய இடங்களில் ஒன்றியச் செயலாளர் என்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். திருக்காட்டுப்பள்ளியில் ஏ.சந்திரமோ கன், விஷ்ணம்பேட்டையில் ஏ.அறிவழகன், பாப நாசம் படுகையில் இ.பன்னீர்செல்வம், தோகூர் - கல்லணையில் எம்.அகிலா, பாதிரக்குடியில் பி.தங்கராஜ், கடமங்குடியில் ஆர்.உதயகுமார், இளங்காடு பி.தாமரைச்செல்வி, மாரனேரியில் பிரான்சிஸ், ஒரத்தூரில் சி.கரிகாலன், முல்லை க்குடியில் கே.பழனி, பழமார்நேரியில் ஜெஸ்டின், சுக்காம்பாரில் பி.ராஜ்குமார், அகரப்பேட்டையில் சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. பூதலூர், செங்கிப்பட்டி உள்ளி ட்ட 21 க்கும் மேற்பட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை ஒன்றியம் இராராமுத்திரைக் கோட்டை, கோவிலூர், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் கே. முனியாண்டி, ஜி.வசந்தி, பிஎஸ்என்எல் மாணி க்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருவை யாறு ஒன்றியம், பூதராயநல்லூர், அம்மையகரம், வரகூர், செந்தலை ஆகிய இடங்களிலும், சேதுபா வாசத்திரத்தில் ஒன்றியம் பெரியகத்தி க்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம்
கும்பகோணம் நகரம் துக்காம்பாளையத் தெருவில் கட்சி கிளைச் செயலாளர் கார்த்தி தலை மையில் துக்காம்பாளையத் தெருவில் வீடு வீடாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தனர். கட்சி யின் நகரக் குழு உறுப்பினர் ம.கண்ணன் பிரச்சா ரத்தை துவக்கி வைத்தார். பாபநாசத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், ஒன்றி யச் செயலாளர் காதர் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகரத்தில் கட்சியின் நக ரக்குழு உறுப்பினர் ஆர்.சோலையப்பன் தலை மை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் சிறப்புரையாற்றினார். கம்மங்காட்டில் ஒன்றியக்குழு உறுப்பினர் ப.செல்வராஜ் தலை மையிலும், இச்சடியில் மாவட்டக்குழு உறுப்பி னர் சி.மாரிக்கண்ணு தலைமையிலும், ஆத னக்கோட்டை, கல்லுக்காரன்பட்டி, வண்ணார ப்பட்டி ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெ ற்றது. கறம்பக்குடி ஒன்றியம் ரெகுநாதபுரத்தில் ஏ. முகமதுகனி, புதுவிடுதியில் எம்.இளவரசு ஆகி யோர் தலைமை வகித்தனர். விராலிமலை ஒன்றியம் நம்பன்பட்டியில் கிளைச் செயலாளர் பழனிச்சாமி தலைமை யிலும், அரிமளத்தில் எம்.அடைக்கப்பன், நமணச முத்திரத்தில் கே.அடைக்கன், லேனாவிலக்கில் சி.மணி, நெடுங்குடியில் சுசி.கணேசன் ஆகி யோர் தலைமை வகித்தனர். பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் என்.பக்ருதீன் தலைமை வகித்தார்.
மன்னார்குடி
கட்சியின் மன்னார்குடி நகர குழு சார்பில் நகர செயலாளர் எஸ் ஆறுமுகம் தலைமை வகித்தார். காந்தி சாலை, மேல ராஜவீதி, கீழ ராஜவீதி, பந்த லடி உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் ஒன்றியம் வையகளத்தூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.எஸ். கலிய பெருமாள் தலைமையிலும், ரிஷியூரில் ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம் தலைமையி லும், கொரடாச்சேரி ஒன்றியம் கிளரியத்தில் ஒன்றிய செயலாளர் கே.சீனிவாசன் தலைமையி லும், முசிறியம் கிளையில் மாவட்ட குழு உறுப்பி னர் எஸ்.தம்புசாமி தலைமையிலும், வல ங்கைமான் ஒன்றியம் வேடம்பூரில் ஒன்றிய செய லாளர் என்.ராதா தலைமையிலும் வலங்கை மான் கடைவீதியில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.கந்தசாமி தலைமையிலும் நடைபெற்றது.
முத்துப்பேட்டை
கட்சியின் முத்துப்பேட்டை ஒன்றிய குழுவின் சார்பாக முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு நகர பொறுப்பாளர் செல்லத்துரை தலை மையிலும், கோட்டூர் ஒன்றியம் இருள்நீக்கி கிரா மத்தில் ஒன்றிய செயலாளர் எல்.சண்முகவேலு தலைமையிலும், கோட்டூர் ஒன்றியத்தில் கள ப்பால், பாலையூர், விக்கிரபாண்டியம் உள்ளிட்ட 10 மையங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய குழு சார்பில் வி.தொ.ச மாநில பொதுச் செயலாளர் அமி ர்தலிங்கம் தலைமை வகித்தார். நெடும்பலம், மேலகொருக்கை, கொக்காலடி, எழிலூர், மேட்டு ப்பாளையம் உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றது. கட்சியின் நகர குழு சார்பில் நகர செயலாளர் ரகுராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கச்சனத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என்.முருகானந்தம் தலைமை வகித்தார்.
நாகப்பட்டினம்
சிக்கல் நகரில் வி.வி. ராஜா தலைமையில் நடைபெற்ற பக்கள் சந்திப்பு இயக்கத்தில் சி. பி.எம். மவட்டச் செயலாளர் நாகைமாலி, மாநில க்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து ஆகியோர் பரப்பு ரையாற்றினர். கீழ்வேளூர் ஒன்றியம், வெண்மணி, தேவூர், கீழ்வேளூர் பகுதிகளில் கட்சி யின் கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெ யராமன் தலைமை வகித்தார். வேதாரணியம் ஒன்றியம், தாணிக்கோட்டகம், மருதூர், வாய்மேடு, ஆயக்காரன்புலம் பகுதிகளில் கட்சியின் வேதார ணியம் ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி தலைமை வகித்தார். தலைஞாயிறு ஒன்றி யம், கச்சநகரம், பனங்காடி பகுதிகளில் தலைஞா யிறு ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு தலைமை யில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.
தரங்கம்பாடி
திருக்கடையூரில் கட்சியின் கிளை செயலாளர் ஜீவானந்தம் தலைமையிலும், கிடங்கல் கடை வீதியில் வீ.எம் சரவணன் தலைமையிலும், இலு ப்பூரில் கிளை செயலாளர் ராஜேந்திரன் தலை மையிலும் நடைபெற்றது.
சீர்காழி
சீர்காழி அருகே உள்ள பச்சை பெருமாநல்லூர், சீயாளம், ஆலாலசுந்தரம் மற்றும் மாங்கநாம்பட்டு ஆகிய ஊர்களின் கடைவீதியில் கட்சியின் சீர்காழி வட்ட குழு சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. வட்ட குழு உறுப்பினர்கள் கேசவன், விஜய், அய்யாசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடைவீதி யில் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் அம்பிகா தலைமையில் நடைபெற்றது. இளையபெருமாள் நல்லூர், ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு ஆகிய பகுதிகளிலும், விக்கிரமங்கலம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. ஆண்டிமடம் கடை வீதியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.மகாராஜன் தலைமை வகித்தார்.