tamilnadu

img

மீனவ கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்சனையை சரி செய்வேன்: செ.ராமலிங்கம் வாக்குறுதி

தரங்கம்பாடி, ஏப்.8-நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சந்திரபாடி, குட்டியாண்டூர், மாணிக்கப்பங்கு, வேப்பஞ்சேரி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுகவேட்பாளர் செ.ராமலிங்கம் திங்களன்றுவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சந்திரபாடி மீனவ கிராம மக்களை சந்தித்து வாக்குறுதிகளை அளித்தார். முன்னதாக கிராம பஞ்சாயத் தார்கள், தலைவர்கள் கலந்து கொண்டகூட்டத்தில் முன்னாள் மீன்வளத்துறைஅமைச்சர் கே.பி.பி.சாமி உரையாற்றினார். மாவட்ட பொறுப்பாளர் நிவேதா எம்.முருகன், ஒன்றிய செயலாளர் மாலிக் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். நிறைவாக பேசிய வேட்பாளர் ராமலிங்கம், சந்திரபாடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் குடிநீர் பிரச்சனை முழுமையாக சீர் செய்ய நடவடிக்கை எடுப் பேன். சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்கவும், சாலைகளை சீரமைக்கவும் மீனவ சமுதாய மாணவர்கள் பயன்பெறும் வகையில் உள்இட ஒதுக்கீட்டுடன் கூடிய மரைன் பொறியியல் கல்லூரிஅமைக்கப் பாடுபடுவேன் என உறுதியளித்தார்.

;