திருத்துறைப்பூண்டி ஜூன்.8- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதை கண்டித்து இருசக்கர வாகன பிரச்சாரப் பயணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியம் சார்பில் சனிக்கிழமை காலை கச்சனத்தில் துவங்கப்பட்டது. இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என்.முருகானந்தம் பேசினார். மாலை 5 மணிக்கு பேரணியை மணலியில் ஒன்றிய செயலாளர் பி.ராமச்சந்திரன், முடித்து வைத்தார். இந்த பிரச்சாரத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என்.முத்துகுமாரசாமி, எஸ்.எஸ்.பாலகுரு, வி.டி.கதிரேசன், ஏ.முருகானந்தம், எம்.முருகதாஸ், ஏ.மாதவவேலன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் 50 வாகனத்தில் கலந்து கொண்டனர். இதே போல் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பில் பிரச்சாரப் பயணம் விட்டுகட்டியில் துவங்கப்பட்டது. இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைத்து மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், ஹைட்ரோ கார்பன் விளைவை குறித்த புத்தகத்தை விவசாய சங்க தலைவர் டி.எஸ்.மணியனிடம் வழங்கினார். இந்த பேரணி மடப்புரம், ஆட்டூர், நுனக்காடு தென்பாதி, கொத்தமங்கலம், இராயநல்லூர், மேட்டுப்பாளையம், விளக்குடி, திருப்பதூர் வழியாக மாலை 5 மணிக்கு பள்ளங்கோவிலில் நிறைவடைந்தது. இந்த பிரச்சாரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.என்.தங்கராசு, ஆர்.வேதையன், ஆர்.மதியழகன், வி.ரவி, என்.வேதையன், ஏ.கே.வேலவன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் 50 வாகனத்தில் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி
கோட்டூர் ஒன்றியக்குழுவின் சார்பில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு வாகன பிரச்சார இயக்கம் ஒன்றிய செயலாளர் எல்.சண்முகவேலு தலை மையில் நடைபெற்றது. இருள்நீக்கி கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு துவங்கிய இப்பிரச்சாரத்தை கட்சியின் மூத்த தோழர் எஸ்.தங்கராசு துவக்கி வைத்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமாரராஜா ஒன்றியக்குழு உறுப்பினர் என்.எம்.சண்முகசுந்தரம், வி.அறிவின்செல்வம், ஆர்.ரெகுபதி, வி.கல்யாணசுந்தரம், பி.ஸ்டாலின், கே.தவமணி, எம்.ஜோதிபாசு, கே.கோவிந்தராசு, வாலிபர் சங்க தலைவர் சதீஷ், செயலாளர் மணிகண்டன், மாதர் சங்க நிர்வாகி டி.பாரதி உள்ளிட்டோர் பிரச்சார இயக்கத்தில் பங்கேற்றனர். பிரச்சாரத்தில் ஐம்பது இரு சக்கர வாகனங்கள் பங்கேற்றன. மக்கள் மத்தியில் பிரச்சார துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. கோட்டூர் ஒன்றிய கிராமங்களில் பிரச்சாரத்தை நிறைவு செய்து இரவு 7 மணி அளவில் கோட்டூர் கடைவீதியில் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பிரச்சார இயக்கத்தை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார்.
குடவாசல்
குடவாசல் பகுதியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரண்டு நாள் வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சார பயணத்திற்கு குடவாசல் தெற்கு பகுதி ஒன்றிய செயலாளர் ஆர்.லட்சுமி தலைமை தாங்கினார். வெள்ளிக்கிழமை மூலங்குடியில் துவங்கிய பிரச்சார பயணம் மஞ்சக்குடி, புதுக்குடி, சிமிலி, பெரும்பண்ணையூர், நெடுஞ்சேரி, வடவேர், கண்டரமாணிக்கம், பிலாவடி என 11 மையங்கள் சென்ற பிரச்சார பயணம் சித்தாடி கிராமத்தில் முதல் நாள் பிரச்சாரம் பயணம் நிறைவு பெற்றது. சனிக்கிழமை தொடங்கிய பிரச்சாரப் பயணம் காங்கேய நகரத்தில் துவங்கி ஓலையமங்கலம், மேலப்பாலுர், மணப்பாறை,துறையூர் என பத்து மையங்களில் பிரச்சார இயக்கம் சென்று நிறைவாக குடவாசல் பகுதியில் நான்கு மையங்களில் ஹைட்ரோ கார்பன் அபாயத்தை விலக்கி பேசி மக்களிடம் துண்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது. ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.ராமதாஸ், ஆர்.இன்பநாதன், எஸ்.கிருஸ்வநாதன், டி.ஏ.சரவணன் மற்றும் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கே.ஜெகதீஸ்வரி, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பி.குமரேசன் என ஏராளமானோர் பிரச்சார இயக்கத்தில் கலந்து கொண்டனர்.
வலங்கைமான்
வலங்கைமான் ஒன்றியம் கோட்டையூர் ஊராட்சியில் சிபிஎம் சார்பில் இருசக்கர வாகனப் பிரச்சாரம் ஒன்றிய செயலாளர் என்.ராதா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு எம்.சேகர் தொடங்கி வைத்தார்.
கொரடாச்சேரி ஒன்றியம்
கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள முகந்தனூரில் இருந்து சனிக்கிழமையன்று இரண்டு குழுவாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். முகந்தனூர் எண்கண் வழியாக காப்பனமங்கலம், திருக்கண்ணமங்கை, எட்டியலூர், அம்மையப்பன், தேவர் கண்ட நல்லூர் வழியாக கமலாபுரம் சென்ற குழுவிற்கு ஒன்றிய குழு உறுப்பினர் ஆர் மணியன் தலைமை தாங்கினார். முகந்தனூர் கொரடாச்சேரி, கண்கொடுத்தவனிதம் என பல்வேறு கிராமங்கள் வழியாக காமலாபுரம் சென்ற இரண்டாவது குழுவுக்கு ஒன்றிய குழு உறுப்பினர் டி.ஜெயபால் தலைமை தாங்கினார். பிரச்சார இயக்கத்தில் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் கே.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, விவசாய சங்க மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.மருதையன், கே.கோபிராஜ், கே.ஜோதிபாசு, எஸ்.சண்முகம், பி.பரமசிவம், கே.வீரையன் என்.மலர்குமார், பி.தனுஷ்கோடி உள்ளிட்டோர் சென்ற பிரச்சார இயக்கம் சனிக்கிழமை மாலை கொரடாச்சேரி ஒன்றியம் கமலாபுரத்தில் ஒன்றிய செயலாளர் கே.சீனிவாசன் தலைமையிலான பொதுக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான பி.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.