கும்பகோணம் ஜூலை 2- பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு கடந்த நான்கு மாதங்க ளாக சம்பளம் வழங்கப்படவில்லை. பல கட்ட போராட்டங்களை தொழி லாளர்கள் நடத்தியும் நிறுவனத்தின் நிதி நிலையை நிர்வாகம் காரணம் காட்டுகிறது மற்றவற்றிற்கு கடன் சொல்ல முடியும் பாலுக்கு அழும் குழந்தைகளுக்கு பசிக்கும் வயிற் றுக்கு எப்படி கடன் சொல்ல முடியும் இன்று வரை பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களின் குடும்பங் கள் பட்டினியோடு பரிதவிக்கின்ற னர். இந்த நிலையைக் கண்டித்து கும்பகோணம் பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு செவ் வாய்க்கிழமை தொடர் உண்ணா விரதப் போராட்டம் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. காரைக்கால் நாகப்பட்டினம் கிளையில் பணியாற்றும் பிஎஸ் என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம் போராட்டம் செய்த னர் பிரச்சனைக்கு முடிவு எட்டும் வரை போராட்டத்தை முன்னெடுத் துச் செல்வோம் என உறுதியுடன் போராட்டம் தொடர்ந்து நடைபெற் றது. போராட்டத்தை நாகை தாமோ தரன் துவக்கி வைத்தார் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர். ராஜ கோபாலன் குருசாமி ஆகியோர் உரை ஆற்றினர் மாவட்ட தலை வர் ராமச்சந்திரன் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் நித்தியானந்தம் பிஎஸ்என்எல் ஊழி யர் சங்க மாவட்ட செயலாளர் டி. மதியழகன் உள்பட ஏராளமான பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதே போல் திருச்சி தொலைத் தொடர்புத் துறை பொது மேலா ளர் அலுவலக வளாகத்தில் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் 72 மணி நேர தொடர் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் மாவட்ட தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி பிஎஸ்என்எல்இயு மாவட்ட செய லாளர் அஸ்லம்பாஷா, பொருளா ளர் கோபி, தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சுந்தர ராஜூ, செயலாளர் முபாரக்அலி, பொருளாளர் சண்முகம் ஆகியோர் பேசினர். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் வாழ்த் துரை வழங்கினார். போராட்டத் தில் 100க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.