பெரம்பலூர், செப்.27- பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே திருமாந்துறை, எறையூர் சர்க்கரை ஆலை பெருமத்தூர், மிளகாநத்தம், பெண்ணகோனம், லெப்பைகுடிகாடு, அயன்பேரை யூர், கீரனூர் உள்ளிட்ட எட்டு கிராமங்களைச் சேர்ந்த விவசாயி களுக்கு சொந்தமான விளை நிலங்கள் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதாக கூறி ஆந்திராவை சேர்ந்த ஜிவிகே குழுமமும், இந்திய பெரு வணிக த்துறை(டிட்கோ) சேர்ந்து 2007 ஆம் ஆண்டு கையகப்படுத்தினர். விவசாயிகள் தங்களது வாழ்வா தாரம் பாதிக்கும் என்று கூறி நிலம் தர மறுத்த போது நிலத்திற்குண்டான கிரயத் தொகையுடன் வீட்டிற்கு ஒருவருக்கு வேலையும் இலவச வீட்டுமனையும் தருவதாக ஒப்பந்தப் பத்திரம் பதிவு செய்து கொடுத்தனர். இத்திட்டத்தினை 5 ஆண்டிற்குள் 827 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதாகவும் உறுதி அளித்திருந்தனர். மிகவும் பின்தங்கிய மாவட்டமான பெரம்ப லூரில் பொருளாதார மண்டல திட்டம் அமைக்கப்பட்டால் சிங்க ப்பூர் போல தொழில் வளர்ந்த மாவ ட்டமாக மாறும் என உறுதி கூறினர். நிலம் கையகப்படுத்தி 13 ஆண்டுகளாகியும் இதுவரை சிறு நடவடிக்கை கூட எடுக்கவில்லை. இது குறித்து 2013 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் இத்திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என அறிவித்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக வந்த அம்மாவின் அரசு என தெரிவித்து ஆட்சி செய்து வரும் எடப்பாடி அரசு இத்திட்டம் குறித்து கண்டு கொள்ளவே இல்லை. இந்நிலையில் நிலம் கொடுத்த விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்க ப்பட்டு கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். 3 ஆயிரம் ஏக்கர் நல்ல விளை நிலங்களும் கருவேலி முள்முளைத்து தரிசாக கிடக்கிறது. எனவே தான் நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013ன்படி எந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அத்திட்டம் 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றாவிட்டால் நிலத்தை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படை க்க வேண்டும் என்ற சட்ட விதிகளின்படி ஜிவிகே குழுமம் செயல்படவில்லை.
ஆகவே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவோடு இதர விவசாய சங்கங்களும் இணைந்து செப்டம்பர் 30-ஆம் தேதி நில மீட்பு போராட்டம் நடத்த முடிவு செய்து அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து 23.9.2019 அன்று மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தின் போது 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நில மீட்பு போராட்டம் குறித்து கோரிக்கை மனு அளித்தனர். அதனடிப்படையில் கோட்டாட்சியர் தலைமையில் 25.9.2019 அன்று மதியம் 3 மணியளவில் பேச்சுவார்த்தைக்கு அழை க்கப்பட்டிருந்தனர். ஆனால் மாலை 5.30 மணி ஆகியும் பேச்சுவார்த்தை துவ ங்காததால் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து விவசாயி களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் வெளிநடப்பு செய்து சென்று விட்டனர். பின்னர் 26.9.2019 அன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் நில மீட்பு போராட்டம் குறித்து கோரிக்கை வைத்தனர். உரிய பதில் கிடைக்காத நிலையில் அன்று மாலையே மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். கோட்டாட்சியர் சுப்பையா, மங்களமேடு காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் மற்றும் வேப்பந்தட்டை, குன்னம் வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் போது ஜிவிகே குழுமத்தினர் தெரிவித்த கருத்துகள் காலத்தை தள்ளிபோடும் நோக்கத்திலும் குழப்பத்தை ஏற்படுத்த உள்ளதாலும் மேலும் இப்பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகத்திடமிருந்து ஒரு உறுதியான பதிலும் இல்லாத நிலையில் திட்டமிட்டபடி 30.9.2019 அன்று நில மீட்பு போராட்டம் நடத்துவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் போது தமிழ்நாடு விவசாயிகள் மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை, கரும்பு விவசாயிகள் சங்கம் ஏ.கே.ராஜேந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.அகஸ்டின், எ.கலையரசி, சிபிஎம் வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஜிவிகே மற்றும் டிட்கோ நிலைப்பாடு
13 ஆண்டுகளாக சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்களை கிடப்பில் போட்டுள்ள ஜிவிகே குழும தரப்பு தண்ணீர் பற்றாக்குறையால் பொருளாதார மண்டலம் அமைக்கும் பணி தாமதமானதாகவும், தற்போது தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் ஜிவிகே நிறுவனமும், டிட்கோ நிறுவனமும் இணைந்து 10.10.2019 ஆய்வுக்கூட்டம் நடத்தி பின்னர் 10.10.2019 க்கு பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக விவசாயிகள் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை மற்றும் இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்கப்படும் என்பதை ஒப்பந்த பத்திரம் செய்து நிலங்களை கிரையம் பெற்றனர். ஆனால் வேலையும் இல்லை. வீட்டுமனை பட்டாவும் இல்லை என்பதாலும் மேலும் பொருளாதார மண்டல திட்டம் துவங்க சாத்தியக்கூறு இல்லை. எனவே நில மீட்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பெரம்பலூரை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்த போது, பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களும், விவசாயிகளும் வேலைவாய்ப்பு பெருக வழிவகை செய்யும் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை அமைக்க நிலம் கொடுத்தனர். தொழிற்சாலை தொடங்கி இதுநாள் வரை நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நிரந்தர வேலை வழங்காமல் ஏமாற்றி விட்டனர். அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படி உள்ள நிலையில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மிக குறைந்த விலையில் நிலங்களை கையகப்படுத்தி மேற்படி நிலங்களை அடமானம் வைத்து கடன் பெற்று விட்டு 13 ஆண்டுகளுக்கு மேலாகியும் திட்டம் துவங்குமா துவங்காதா, வேலை கிடைக்குமா, வீட்டு மனை கிடைக்குமா என்று நிலம் கொடுத்த விவசாயிகளின் கண்ணீரை துடைக்க இந்த நில மீட்பு போராட்டம் அவசியம் என்கின்றனர். மேலும் பல்வேறு அமைப்புகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவி ப்பதாக கூறியுள்ளனர். (ந.நி)