தேனி, மே 17- திருவள்ளூரில் இருந்து தேனிக்குஇரண்டாம் கட்டமாக வாக்குப் பதிவுஇயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள் ளன.இதில் விவிபேட் இயந்திரங்களில் பெயர்கள் அழிக்கப்படாமல் உள்ளதுஎன்று கட்சியினர் புகார் தெரிவித்துள் ளனர்.கோவையில் இருந்து தேனிக்கு மே மாதம் 7 ஆம் தேதியன்று இரவில்50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. எந்தமுன்னறிவிப்பின்றி வாக்குப்பதிவுஇயந்திரங்கள் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டதால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.ஆளும்கட்சி வேட்பாளருக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சியினர் மத்தியில் எழுப்பியது. இந்நிலையில் அடுத்த சிலநாட்களிலே வடுகபட்டி, பாலசமுத்திரம் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த அறிவிப்பு வெளியிடப் பட்டது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிதாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. 20 கட்டுப்பாட்டு இயந்திரமும், 30 விவிபேட் இயந்திரங்களும் வந்தன. இவைகள் அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் இறக்கி பாதுகாப்பாக வைக்கப்பட் டுள்ளன.இது குறித்து மாவட்ட ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் கூறுகையில், மறுவாக்குப்பதிவிற்கு இவ்வளவு இயந்திரங்கள் தேவைப்படாது. ஆனால் இயந்திரங்களை ரேண்டம் முறையில் தேர்வு செய்ய 100 இயந்திரங்கள் தேவை. மேலும் தேர்தலன்று பழுது ஏற்பட்டால் கூடுதலாக இயந்திரங்களை தயார்நிலையில் வைத்திருப்பது அவசியம். எனவே இவை வந்துள்ளது. மறுவாக்குப்பதிவின் போது கூடுதல் பாதுகாப்பு கோரிபல கட்சியினரும் மனு அளித்துள்ளனர். எனவே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித் தார். பெரியகுளத்தைச் சேர்ந்த சொகுசு வேனில் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. விவிபேட்டில் பெயர்கள் அழிக்கப்படாமல் உள்ளது என்று கட்சியினர் புகார் எழுப்பினர்.இதற்கு அதிகாரிகள் கூறுகையில், வாக்குப்பதிவு இயந்திர பதிவுகள் உங்கள் முன்பாக அழிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட பிறகே பயன் படுத்தப்படும். சொகுசு வாகனத்தில் எவ்வித அரசியலும் இல்லை என்று தெரிவித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.