மன்னார்குடி, ஜுன் 12- மயிலாடுதுறை மூவலூரில் உள்ள மூவலூர் மூதாட்டி ராமா மிர்த அம்மையார் அரசு உயர்நிலைப்பள்ளியில், மயிலாடு துறை ஜே.சி.ஐ மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தின. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை ஜே.சி.ஐ. தலைவர் சி.பி.சர வணன் தலைமை வகித்தார். பெஸ்ட் கல்லூரி முதல்வர் ராமன் முன்னிலை வகித்தார். செயலாளர் சதீஸ் நாராயணன் வர வேற்றார். சிறப்பு அழைப்பாளர் தொழிலதிபர் ஜெனிபர் பவுல்ராஜ் முகாமை துவக்கி வைத்தார். இதில் உடல்எடை, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி ஆகிய சோத னைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப் பட்டது. முகாமில் 270 பேர் பரிசோதனை செய்து கொண்ட னர். பொருளாளர் எம்.ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.