சாய்ராம் கல்வி குழும நிறுவனர் லியாமுத்துவின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வழக்கறிஞர் தர்மராஜன், பொறியாளர் செல்வகணபதி ஆகியோர் தலைமையில், நிர்வாகப் பிரதிநிதி சோமசுந்தரம், முதல்வர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. லியோமுத்துவின் உருவப் படத்திற்கு பள்ளி மாணவ - மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தலைமை ஆசிரியை லெட்சுமிபிரியா வரவேற்க, உதவி தலைமையாசிரியை சவுந்தர்யசத்தியா நன்றி கூறினார்.