கிராம மக்கள் புகாரில் அம்பலமானது : 2 பேர் கைது
தஞ்சாவூர், மே 29- பேராவூரணி அருகே கல்ல ணைக் கால்வாய் ஆற்றங்கரையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பி லான மரங்களை, போலியான டெண்டர் ஆவணங்களை தயார் செய்து, கடத்தி விற்பனை செய்த சம்பவத்தில் வனத்துறை அதிகாரி கள் 3 மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தில், கல்லணைக் கால்வாய் புதுப்பட்டினம் 19வது நம்பர் வாய்க்கால், குளக்குடி குளத்தின் கரையிலும் உள்ள 84 மருத மரங்கள் வெட்டப்பட்டு லாரிகள் மூல மாக, தூத்துக்குடி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தன.
கஜா புயல் கால உரிமம்
இந்நிலையில், மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருவ தால், சந்தேகமடைந்த கிராம மக்கள், கடந்த 23 ஆம் தேதி சம்பவ இடத்திற்கு சென்று, அங்கிருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் மரங்களை வெட்டுவதற்கான ஆர்டரை கேட்டுள்ளனர். அப்போது கடந்த 2018ல் வீசிய கஜா புயலின் போது விழுந்துள்ள மரங்களை வெட்டுவதற்கான உரிமத்தை அவர்கள் காண்பித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கிராம மக்கள், மரத்தை ஏற்றி நின்ற ஒரு லாரி, ஒரு கிரேன் இயந்திரங்களை ஊருக்குள் எடுத்து சென்று, கோவில் வளாகத்தில் நிறுத்தினர். விசார ணையில், ஒரத்தநாட்டை சேர்ந்த மரமில் வைத்துள்ள ஒருவர் ஏலம் எடுத்துள்ளதாகவும், அவர் தங்க ளுக்கு வெட்ட அனுமதி கொடுத்த தாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக கிராமமக்கள் பேராவூரணி பொதுப்பணித்துறை, வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை வனச்சரகர் இக்பால், வனத்துறை சார்பில் மரங்கள் வெட்ட அனுமதி அளிக்கவில்லை என கூறி விட்டு நழுவி விட்டார். இதையடுத்து பொ துப்பணித்துறை உதவி செயற்பொறி யாளர் பிரசன்னா திருச்சிற்றம்பலம் காவல்துறையில், 3 பேரில் ஒருவரின் பெயரில் மட்டுமே புகார் அளித்தார். அதன்பின்னர் சம்பவம் நடந்து 5 நாட்க ளாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனிடையே லாரியை யும், கிரேனையும் உரிமையாளர்கள் எடுத்து சென்றுள்ளனர்.
போலி ஆவணங்கள்
இதையடுத்து கிராம மக்கள், தமிழக முதல்வர், தஞ்சை ஆட்சியர் கோவிந்தராவ் ஆகியோருக்கு புகார் மனுக்களை அனுப்பினர். ஆட்சிய ரின் உத்தரவின் பெயரில், தஞ்சாவூர் மண்டல வனப் பாதுகாப்பு படை உதவி வனப் பாதுகாவலர் ராதாகிருஷ்ணன், பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலட்சமி ஆகியோர் கிராம மக்களிடம் விசாரணை நடத்தி னர். விசாரணையில், பட்டுக் கோட்டை வனச்சரகத்தில் 11 இடங்களில் உள்ள தைல, சவுக்கு, கரு வேல மரங்களை வெட்ட கடந்த மார்ச் 20 ஆம் தேதி ஏலம் நடை பெற்றுள்ளது. ஆனால் பிடிபட்ட வர்கள் கூறியது போல, ஒரத்த நாட்டை சேர்ந்தவர் ஏலம் எடுக்க வில்லை என தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறை அதி காரிகள் நடத்திய விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த அரசியல் பிர முகர்கள், புதுக்கோட்டை மாவட்டத் தை சேர்ந்த மரமில் முதலாளிகளுடன் சேர்ந்து பொதுப்பணித்துறை, வனத்துறை அதிகாரிகள், போலி யாக ஆவணங்களை தயார் செய்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இடமாறுதல், இடைநீக்கம்
இதையடுத்து தஞ்சை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிர மணியன், மாவட்ட வன அலுவலர் குருசாமி ஆகியோர், பட்டுக் கோட்டை வனச்சரக அலுவலர் இக்பாலுக்கு நோட்டீஸ் அனுப்பி துறைரீதியான விசாரணைக்கு உத்தர விட்டனர். மேலும், வனவர் ராமதாஸ் என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டு பணியிட மாற்றத்திற்கும், வனக்காப்பாளர் கணபதி செல் வத்தை செய்யவும் உத்தரவிட்டனர்.
இடைநீக்கம்
அவர்களிடம் நடத்திய விசார ணையை தொடர்ந்து, அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, புதுக் கோட்டை மாவட்டம் அணவயலில் மரமில் வைத்துள்ள கணேஷன் (49), துலுக்கவிடுதியை சேர்ந்த ராஜேந்தி ரன் (42), ஆகிய இருவரையும் திருச் சிற்றம்பலம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தலைமறைவாக உள்ள சண்முகம் என்பவரை தேடி வரு கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வனத்துறை சார்பில் 15 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டு, வெட்டப்பட்ட மரங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்ப வத்தில் பொதுப்பணித்துறை, வனத் துறை அலுவலர்கள் மற்றும் முக்கி யப் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டி ருப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் உட னடியாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.