tamilnadu

img

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்....

திருச்சிராப்பள்ளி;
கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பண்டிகை கால நிவாரணமாக ரூ.7500 வழங்க வேண்டும். ரேசன் பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சியில் 5 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்தநல்லூர் ஒன்றியம் கொடியாலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குவிதொச ஒன்றிய பொருளாளர் செந்தில் குமார் தலைமை வகித்தார். கரூர் மாவட்டச் செயலாளர் முத்துச்செல்வன் சிறப்புரையாற்றினார். பேரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விதொச ஒன்றிய துணை செயலாளர் செல்வமணி தலைமை வகித்தார். விதொச மாநில பொருளாளர் சங்கர், மாவட்டத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.முத்தரசநல்லூரில் ஆர்ப்பாட்டத் திற்கு விதொச ஒன்றிய துணைத்தலை
வர் இளவரசன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்லெனின், விதொச ஒன்றிய செயலாளர்சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உத்தமர்சீலியில் ஆர்ப்பாட்டத் திற்கு விதொச மாவட்ட பொருளாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். விதொச மாநில பொதுச் செயலாளர் பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் கே.சி. பாண்டியன், செயலாளர் தங்கதுரை, சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதிகுழு செயலாளர் தர்மா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.பஞ்சப்பூரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு விதொச மாவட்ட துணைத்தலைவர் தங்கராஜ் தலைமை வகித் தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், பகுதி செயலாளர் வேலுச்சாமி மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.