tamilnadu

img

காவிரி நீரை திறந்து விடக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 14-  காவிரி நீரை திறந்து விடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஒன்றிய நகரக்குழுக்கள் சார்பில் திருத்துறைப்பூண்டி தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் காலை நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தினை விவசாய சங்கத்தின் மாநில தலைவர் கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  மாவட்ட பொருளாளர் எஸ்.சாமிநாதன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி வி.ச மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள், மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி, துணை செயலாளர் எம்.ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் டி.எஸ்.மணியன், என்.எம்.சண்முகசுந்தரம், ஆர்.வீரமணி, வி.டி.கதிரேசன், தலைவர்கள் டி.வி.பன்னீர்செல்வம், என்.வீராச்சாமி, கே.கோவிந்தராஜ், ஜி.துரைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர்கள் டி.வி.காரல்மார்க்ஸ், கு.பாலசுப்பிரமணியன், எல்.சண்முகவேல், நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.