tamilnadu

img

மக்காச் சோள நிவாரணம் எங்கே?

பெரம்பலூர், ஜூன் 29- பெரம்பலூர் ஆட்சியர் கூட்டரங்கில் விவ சாயிகள் குறைதீர் கூட்டம்  ஆட்சியர்(பொ) அழ கிரிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டம்  தொடங்கியதும், அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் அனைவரும் தலை யில் முக்காடு அணிந்து எழுந்து நின்று கோஷ மிட்டனர். படைப்புழு தாக்குதலால் பாதிக்க ப்பட்ட மக்காச்சோளம் பயிருக்கு நிவாரணம் வழங்குவதாக கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு  அறிவித்தது. அந்த இழப்பீட்டு தொகை இது வரை வழங்கப்படாததைக் கண்டித்தும்,  வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்ட விவசா யிகளுக்கு மத்திய பயிர் காப்பீட்டுத் திட்ட த்தின் கீழ் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடை பெற்றது. இதில் விவசாய சங்க நிர்வாகிகள் ராஜாசிதம்பரம், என்.செல்லத்துரை, பி.ரமேஷ், வரதராஜன், விஸ்வநாதன், ராஜூ, ராமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  பின்னர் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி னர். திருவள்ளுவர் உழவர் மன்றத் தலை வர் வரதராஜன் பேசுகையில், மாவட்டத்தை இர ண்டு மண்டலங்களாக பிரித்து பெரம்பலூரிலும், 36 கிராமங்களை உள்ளடக்கிய பூலாம்பா டியிலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பூலாம்பாடியில் அமைக்க போதிய இட மில்லை. எனவே மார்க்கெட்டிங் சொஸைட்டி அமையவுள்ள பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். பூலாம்பாடியில் கட்டப்ப ட்டுள்ள கிளை நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்டத்தில் கடும்  வறட்சி நிலவுவதால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமா ளிக்க ஆங்காங்கே ஆழ்துளை கிணறுகள் தோண்டும் பணி நடைபெறுகிறது. இதில் பெரும் மோசடி நடைபெறுகிறது. 210 அடி ஆழ த்துக்கு போர்வெல் அமைப்பதாக ஒப்பந்தம் செய்து விட்டு வெறும் 150 அடி ஆழத்துக்கு போ ர்வெல் அமைப்பதும், அதில் 70 அடி ஆழ த்துக்கு மட்டும் பைப் அமைப்பது நடை பெறுகிறது. இதுகுறித்து உயரதிகாரிகள் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்து மோசடி செய்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  தமிழக விவசாயிகள் சங்க இளைஞரணிச் செயலாளர் நீலகண்டன் கூறுகையில், பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் பெரும்பாலும் இழப்பீட்டுத் தொகை வழங்குவதே இல்லை. ஆகவே கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசா யிகள் கடன் பெறும் போது பயிர் காப்பீடு செய்வ தை கட்டாயமாக்கக் கூடாது. மாவட்டத்தில் தட்டு ப்பாடின்றி பொட்டாஷ் உரம் கிடைக்க அதிகா ரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் ராஜேந்திரன் கூறுகையில், கடந்த 5 ஆண்டு களாக தமிழக அரசு கரும்புக்கு உரிய மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவிக்க வில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் பாதி க்கப்பட்டுள்ளனர். மாநில அரசு உடனே கரும்பு க்கான தனது பரிந்துரை விலையை அறி விக்க வேண்டும். மேலும் பெரம்பலூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயி களின் பயி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.   இதை தொடர்ந்து விவசாயிகள் சங்க நிர்வா கிகள் பலர் பேசுகையில், மாவட்டத்தில் படைப்புழுவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களுக்கு நிவாரணம் வழங்க  வேண்டும்.  கால்நடை பராமரிப்பு துறை மூலம் வைக்கோல் மானிய விலையில் கிடைக்க வேண்டும். எறையூர் சர்க்கரை ஆலை நிர்வா கம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி  தொகையினை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும். கூட்டுறவு கடன் சங்க த்தில் அனைத்து விவசாய கடன்களை தள்ளு படி செய்ய வேண்டுமென விவசாய சங்க நிர்வா கிகள் வலியுறுத்தி பேசினர். பின்னர் ஆட்சியர்(பொ) அழகிரிசாமி பேசு கையில், மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்ச னையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்கா ச்சோளம் பயிருக்கு நிவாரணம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்ட த்தில் வேளாண் இணை இயக்குநர்(பொ) ராஜ சேகரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் பெரியசாமி, வேளாண் துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.