tamilnadu

img

அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

தஞ்சாவூர் செப்.15- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 111 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதையொட்டி பேராவூரணி சேதுசாலையில் உள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.  நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர்கள் உ.துரைமாணிக்கம் (பேராவூரணி), நாடியம் சிவ.மதிவாணன் (சேதுபாவாசத்திரம்), நகரச் செயலாளர் வி.என்.பக்கிரிசாமி, முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர் எஸ்.நீலகண்டன், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் ஆர்.பி.ராஜேந்திரன், நகர மாணவரணி செயலாளர் கோவி.இளங்கோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா திருவாரூரில் மாவட்ட கலைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்றது. திருவாரூர் காட்டுக்காரத் தெருவில் நடைபெற்ற இவ்விழாவிற்கு முன்னாள் நகர் மன்றத் துணைத் தலைவர் த.செந்தில் தலைமையேற்றார். மன்ற தலைவர் எஸ்.அசோகன் தலைமை வகித்தார். நகர செயலாளர் எஸ்.பிரகாஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவ்விழாவில் ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;