tamilnadu

img

மண்ணச்சநல்லூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வாலிபர் சங்கம் வலியுறுத்தல்  

திருச்சிராப்பள்ளி: அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலுள்ள காலிப்பணியிடங்க ளை உடனே நிரப்ப வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும். டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். திருச்சி மாவட்டத்தில் விளையும் வேளாண் உற்பத்தி பொருட்களை கொண்டு புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். மண்ணச்சநல்லூர் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புறநகர் மாவட்டக்குழு சார்பில் மண்ணச்சநல்லூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பாலு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராபின்சன், பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் காளிராஜ், மாவட்டப் பொருளாளர் ஆனைமுத்து, மாவட்டச் செயலாளர் நாகராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில துணைத் தலைவர் பிரியசித்ரா நிறைவுரை யாற்றினார். ஒன்றியத் தலைவர் முத்துவேல் நன்றி கூறினார்.

;