tamilnadu

img

திருச்சியில் டிஆர்யுவினர் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக10- ரயில்வேயின் தொழிற்சங்க அங்கீகார த்திற்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 28, 29ம் தேதிகளில் நடத்தாமல் பிஜேபியின் சங்கத்திற்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்க மறைமுக திட்டமிட்டு காலதாமதம் செய்வதையும், பாலக்காடு ஸ்டேசன் மாஸ்டர் உன்னிகிருஷ்ணனுக்கு கட்டாய ஓய்வு வழங்கியது உள்ளிட்டவை கண்டித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் வெள்ளியன்று மாலை திருச்சி ரயில்வே ஜங்சனில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம்  முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு உதவி கோட்ட செயலாளர் சுவாமிநாதயாதவ் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், டிஆர்இயு உதவி பொதுச்செயலாளர் மண்ணைமனோகரன் ஆகியோர் பேசினர். உதவி கோட்ட செயலாளர்கள் கரிகாலன், சுப்ரமணியன், ஒர்க்ஷாப் டிவிசன் கோட்ட தலைவர் மகேந்திரன், ராஜா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.  இதே போன்று பொன்மலை ஆர்மரிகேட் அருகில் டிஆர்இயு பொன்மலை ஒர்க்ஷாப் டிவிசன் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒர்க்ஷாப் டிவிசன் கோட்ட தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி உதவி பொதுச்செயலாளர் மனோகரன், உதவி கோட்ட செயலாளர் லெனின், சங்கர், கோட்ட உதவி தலைவர் ஜெகநாதன் ஆகியோர் பேசினர். கணேசன், சிற்றரசு, ராஜசேகர், குணசேகரன், டெக்ஸ்டர், ஆறுமுகம், ஹரி மற்றும் கிளை நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.