tamilnadu

img

2 வருடமாக இயங்காத குடிநீர் மின்மோட்டார்

சீர்காழி, மே 7-கொள்ளிடம் அருகே மேலகரம் கிராமத்தில் 2 வருடமாக இயங்காத குடிநீருக்கான மின்மோட்டாரை இயக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் ஊராட்சி மேலகரம் கிராமத்தில் 3 இடங்களில் ஆழ்துளை அமைத்து நிலத்தடி குடிநீரை பயன்படுத்த சக்தி வாய்ந்த மின்மோட்டார் பொருத்தப்பட்டது. இதற்காக கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிலான இப்பணி மூலம் அப்பகுதியில் உள்ள சுமார் 200 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சில தினங்கள் மட்டுமே இயங்கிய மின்மோட்டார் திடீரென நிறுத்தப்பட்டது. கடந்த 2 வருடங்களாக மின்மோட்டார் இயங்காமல் கிடக்கிறது. இதனை சரி செய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதியில் தற்போது குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் மோட்டாரை சரி செய்து போதிய குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

;