tamilnadu

img

மேற்பனைக்காடு ஊராட்சியில் மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது

புதுக்கோட்டை, ஜூன் 24- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மேற்ப னைக்காட்டில் மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்கும் முயற்சிக்கு அனுமதி அளிக்க கூடாது எனக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்து வலியுறத்தினர்.  அறந்தாங்கி தாலுகா மேற்பனைக்காடு ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையால் அருகில் உள்ள பள்ளி மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் மக்களுக்கும், மாண வர்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக கூறி அப்பகுதி பெண்கள், இளைஞர்கள் என பொதுமக்கள் கடை முன்பாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கி ருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்த நிலையில் அதே பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பதற்காண முயற்சிகள் நடப்பதாக அறிந்த அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கையெ ழுத்திட்ட மனுவை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கொடுத்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக மனுக்கொடுத்த வர்கள் கூறினர்.

;