பெரம்பலூர், ஜூன் 22- திமுகவின் பெரம்பலூர் மாவட்டம் சார்பில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத அதிமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் காந்தி சிலை முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட மருத்துவரணி உறுப்பினர் கருணாநிதி மற்றும் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நகரச் செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் அப்துல் பாரூக் நன்றி கூறினார்.
பொன்னமராவதி
பொன்னமராவதி ஒன்றியம் திருக்களம்பூரில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்காத அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தெற்கு ஒன்றியச் செயலாளர் அடைக்கலமணி தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆலவயல் சுப்பையா, பொன்னமராவதி நகரச் செயலாளர் அழகப்பன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி சிக்கந்தர், திருமயம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் முரளிதரன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் முத்துக்குமார், ஒன்றிய இளைஞரணி சாமிநாதன், ஒன்றிய பொருளாளர் மணி அண்ணாதுரை, ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி, ஆட்டோ அப்பாஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.