tamilnadu

img

திருச்சியில் புறப்பட்ட விமானத்தில் கோளாறு

திருச்சி:
113 பயணிகளுடன் திருச்சியிலிருந்து சிங்கப்பூா் புறப்பட்ட விமானத்தில் திடீரெனதொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது.

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு தினம்தோறும் விமானம் இயக்கப்பட்டு வரு கிறது. இந்த விமானம் செவ்வாய்கிழமை அதிகாலை திருச்சியில் இருந்து சிங்கப்பூா் நோக்கி 113 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. 113 பயணிகளும் விமானத்தில் காத்திருந்த நிலையில், கோளாறு சரிசெய்யப்பட்டு இரண்டு மணி நேரம் தாமதமாக சிங்கப்பூா் புறப்பட்டு சென்றது. 

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு வானில் பறக்கும் முன் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
 

;