பெரம்பலூர், ஜூன் 11- தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர் சங்கத்தினர், துறைமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலைப் பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கை களை 13 ஆண்டுக்கும் மேலாக நிறைவேற்றவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக அடிப்படையில் போராடும் சாலைப் பணியாளர்கள் மீது காவல்துறையை ஏவிவிட்டு, இழிவு படுத்திய நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் மற்றும் தலைமைப் பொறியாளரை கண்டித்தும் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் குமரிஆனந்தன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில துணைத்தலைவர் கோதண்டபாணி, மாவட்ட செய லாளர் சுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இணைச் செயலாளர்கள் ராஜா, முத்து, துணைத் தலைவர் ராமநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரும் 14-ஆம் தேதி முதல் கையெழுத்து இயக்கமும், 29-ந் தேதி முதல் அமைச்சர், தலைமைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை செய லாளர், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு முறையீட்டு இயக்கமும் நடத்தப்படும் என்று சாலைப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரி வித்தனர்.