நாகப்பட்டினம், பிப்.28- நாகை மாவட்டம், வேதாரணியம் வட்டம், கோடியக்காடு ஊராட்சிப் பகுதி என்பது சதுப்பு நிலக்காடு நிறைந்த பகுதியாகும். கோடி யக்காடு, மாவட்டத்தின் இயற்கைச் சூழல் மிகுந்த சிறந்த சுற்றுலாத் தல மாகும். இங்கு பல்வகை மான்கள், காட்டு மாடுகள் எனக் காண்போ ரைக் கவரும் சுற்றுலாத் தலமாகும் இது. ஏராளமான மருத்துவ மூலிகைச் செடிகளும், மரவகைகளும் கோடி யக்காட்டில் விளைந்திருக்கின்றன. கோடியக்காட்டுக்கு அருகில் கடற்கரை ஓரமாகக் கோடியக்கரை அமைந்துள்ளது. கோடியக்காட்டில் சுற்றுலாப் பயணிகள் உயரத்தில் நின்று சுற்றிலும் பார்வையிடுவ தற்காக இங்கு ஒரு சுற்றுலாக் கோபு ரம் அமைக்கப் பட்டிருந்தது. கடந்த கஜா புயலினால் இந்தக் கோபுரம் சிதைந்து வீழ்ந்து இட்டது. இது வரை, இடிந்த கோபுரத்தைப் புனர மைப்பதற்கு சுற்றுலாத் துறையோ, தமிழக அரசோ, உள்ளாட்சி நிர்வாக மோ எவ்வித முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.