tamilnadu

img

சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை புதுப்பிப்பு

அறந்தாங்கி, ஏப்.11- புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அரசு மருத்துவமனை அருகே 1998 ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் முழுஉருவ சிலையை கடந்த ஞாயிறுஇரவு மர்ம நபர்கள் உடைந்தெறிந்தனர். இச்சம்பவம் அறிந்த மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினர் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தினர். அதையடுத்து சம்பவஇடத்திற்கு வந்த போலீசார் சிலையை உடைத்த குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்கிறோம். மேலும் உடைக்கப்பட்ட சிலையை புதுப்பித்து தருகிறோம் என்று உறுதியளித்தனர்.இதன்படி புதுப்பிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு திமுக தெற்குமாவட்ட பொறுப்பாளர் சட்டமன்றஉறுப்பினர் எஸ்.ரகுபதி, ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் உதயம்சண்முகம், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் தென்றல் கருப்பையா, திமுக ஒன்றியசெயலாளர் பொன்கணேசன், திராவிடர் கழக மண்டல தலைவர் ராவணன், திமுக நகர செயலாளர் இரா.ஆனந்த், சிபிஎம் நகர செயலாளர் கே.தங்கராஜ், மதிமுக நகர செயலாளர் மோகன், காங்கிரஸ் கட்சியினர், திமுகமுன்னாள் கவுன்சிலர் முத்து, திக நகரசெயலாளர் சுப்பிரமணியன், பெரியார்சிலை பராமரிப்பாளர் உண்மை பாலுமற்றும் சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மனிதநேய ஜனநாயககட்சியினர், வர்த்தக சங்க தலைவர் வரதராஜன் உள்பட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தினர்.

;