புதுக்கோட்டை,மே 27-புதுக்கோட்டைமாவட்டம் அரிமளம் ஒன்றியம் ஓணாங்குடிபஞ்சாயத்திற்குஉட்பட்டசீகம்பட்டிகிராமத்தில் நெல்,காய்கறிமற்றும் வெள்ளரிசாகுபடியாளர்களுக்கானபயிர் மருத்துவவிழிப்புணர்வுமுகாம் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சிநிறுவனம்,வம்பன் வேளாண் அறிவியல் மையம் மற்றும் கேபிநிறுவனத்தின் சார்பில் அண்மையில் நடைபெற்றதுஎம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சிநிறுவன சூழல் தொழில்நுட்பவியல் இயக்குநர் முனைவர்.ரெங்கலெட்சுமி விழிப்புணர்வு முகாமைத்துவக்கிவைத்தார். எம்.எஸ்.சுவாமிநாதன், ஆராய்ச்சி நிறுவன திட்டஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர்.ராஜ்குமார் தனது சிறப்புரையில்ஓணாங்குடி கிராம அறிவு மையத்தில் செயல்பட்டு வரும் பயிர் மருத்துவ மையத்தின் முக்கியத்துவம் அதன் செயல்பாடுகள் பற்றிவிளக்கினார். மகசூலைப் பாதிக்கும் முக்கிய காரணிகளான பூச்சி,நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை மேலாண்மை செய்வதில் பயிர் மருத்துவ முகாமின் பங்கு குறித்தும் விளக்கினார்.எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானிமுனைவர். மலர்வண்ணன், வம்பன் வேளாண் அறிவியல் மையஉதவிப்பேராசிரியர் முனைவர் சண்முகபாக்கியம், பயிர் மருத்துவர் முனைவர். பாரதிதாசன் உள்ளிடோர் பேசினர். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மண் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்ட உவர்நிலங்களுக்கு உவர் தன்மையைத் தாங்கி வளரக் கூடிய சி.எஸ்.ஆர் 36 நெல் இரகம் சோதனை அடிப்படையில் பயிர் செய்ய 5 விவசாயிகளுக்கு வம்பன் வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக பெற்றுவழங்கப்பட்டது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.மேகலா,முகமது பிலால், ஏசுதாஸ், வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.