tamilnadu

img

வேங்கூர் பூசத்துறையில் தடுப்பணை கோரி சிபிஎம் பிரச்சாரப் பயணம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 21- நிலத்தடிநீர், குடிநீர், விவ சாயத்தை பாதுகாத்திட திரு வெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கூர் பூசத்துறை அருகில் காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவெறும்பூர் ஒன்றியக்குழு சார்பில் ஞாயிறு அன்று பத்தாளப்பேட்டை முதல் சர்க்கார்பாளையம் வரை பிரச்சா ரம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பத்தாளப்பேட்டையில் நடை பெற்ற பிரச்சாரத்திற்கு கட்சியின் திருவெறும்பூர் ஒன்றிய செயலா ளர் நடராஜன் தலைமை வகித்தார். பிரச்சாரப் பயணத்தை புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் தொடங்கி வைத்து பேசுகையில், திருச்சி– சென்னை தேசிய நெடுஞ் சாலை முதல் கல்லணை வரை சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள் ளன. இப்பகுதியின் இருகரைகளி லும் ஒரு போகம் முதல் 3 போகம் வரை சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் பெல், ஓஎப்டி போன்ற பகுதிகளுக்கு 5-க்கும் மேற் பட்ட இடங்களில் போர் போடப்பட்டு குடி நீர் எடுக்கப்படுகிறது.  இப்பகுதியில் கோடைக் காலங் களில் தண்ணீர் இல்லாததால் நிலத் தடிநீர் போதுமான அளவு கிடைப்ப தில்லை. எனவே இப்பகுதி மக்க ளின் குடிநீர் மற்றும் விவசாயத்தை பாதுகாத்திட வேங்கூர் பூசத்துறை அருகில் காவிரி ஆற்றில் தடுப் பணை கட்ட வேண்டும். தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் ஆட்சியா ளர்கள் ஆறுகள், ஏரி, குளங்கள் விற்கப்படுகின்றன. முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற அனைத்து இயற்கை வளங்களையும் சூறை யாடுகின்றனர். மேலும் விவசாயம், 100 நாள் வேலைத்திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூடுகின்றனர். எனவே நாம் அனைவரும் கட்சி வேறு பாடின்றி போராடினால் தான் இப் பகுதியில் தடுப்பணை கட்டி நிலத்தடிநீர் மற்றும் விவசாயத்தை பாதுகாக்க முடியும் என்றார்.  பிரச்சாரத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவ ராஜ், மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் முரு கேசன், சங்கிலிமுத்து, கணேசன் ஆகியோர் பேசினர். பத்தாளப் பேட்டையில் தொடங்கிய பிரச்சா ரம் கிளியூர், விளாங்குளம், ஒட்டக் குடி வழியாக சர்க்கார்பாளை யத்தில் நிறைவடைந்தது.  சர்க்கார்பாளையத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா பேசினர். பிரச்சாரம் மற்றும் ஆர்ப் பாட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் ராதாகிருஷ்ணன், குரு நாதன், சுதாகர், ரவிகுமார், பெரிய சாமி, ராமமூர்த்தி, சங்கர், தங்க வேல், மாரியம்மாள், யமுனாதேவி மற்றும் கிளை செயலாளர்கள், முன் னிலை தோழர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.