tamilnadu

img

நன்னிலம் சிபிஎம் மாவட்டக் கவுன்சிலருக்கு வாழ்த்து

குடவாசல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார் மார்க்சிஸ்ட் கட்சியின் ஜெ.முகம்மது உதுமான். இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்திரமுர்த்தி, மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக மாவட்ட கவுன்சிலருக்கு வெற்றி பெற்ற வேட்பாளர் ஜெ.முகமது உதுமானுக்கு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நன்னிலம் ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.சலவுதீன், மாவட்ட குழு உறுப்பினர் சரவண சதீஸ், நன்னிலம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜா, ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

;