tamilnadu

img

தோழர் லீலாவதி நினைவுதினம் கடைப்பிடிப்பு

திருச்சிராப்பள்ளி, ஏப்.24-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் களப்போராளியும், மதுரை மாமன்ற முன்னாள் உறுப்பினருமான மறைந்த தோழர் தியாகி லீலாவதி நினைவு தினம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் செவ்வாயன்று திருவெறும்பூர் ஒன்றியம் துவாக்குடிமலை பகுதியில் கடைப் பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் மாரியம்மாள் தலைமை வகித்தார். தோழர் லீலாவதியின் உருவப் படத்திற்கு ஒன்றிய நிர்வாகிகள் லதா,கல்யாணி, உஷா, செல்லம்மா, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்பழனிசாமி, எஸ்எப்ஐ அருண்பிரசன்னா, டிஒய்எப்ஐ மனோஜ் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.

;