tamilnadu

தோழர் பாப்பா உமாநாத் நினைவு தினம் சித்தாந்தம், அரசியல் ரீதியாக மக்களுக்கு நம்பிக்கையை சிபிஎம்யால் மட்டுமே கொடுக்க முடியும்

திருச்சிராப்பள்ளி, டிச.17- சுதந்திர போராட்ட வீரரும், பெண் ணுரிமை போராளியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஸ்தாபன தலை வர்களில் ஒருவருமான மறைந்த தோழர் பாப்பா உமாநாத்தின் 9ம் ஆண்டு நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய் அன்று திருச்சி பொன்மலை சங்கத்திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் அனு சரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய கட்டுப் பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பி னர் வாசுகி, தோழர் பாப்பா உமாநாத் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பின்னர் அவர் பேசியதாவது: தோழர் பாப்பா உமாநாத் சட்டமன்ற உறுப்பினராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த போதும் பொதுமக்கள் அவரை எளிதில் சந்திக்கும் வகையில் அவர் வீட்டு கதவு திறந்தே இருக்கும்.  இப்போது உள்ள காலக்கட்டம் இருள் சூழ்ந்த காலக் கட்டமாக உள்ளது. ஒரு சிறிய ஒளி கீற்றுகள் கூட மக்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கும். அந்த நம்பிக்கையை சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மக்களுக்கு நம்பிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே கொடுக்க முடியும். அரசியல் வேறு நமது தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்று பார்க்க முடியாது என்பார். தனி மனிதன் வாழ்க்கை முறையும், அரசியலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. பாப்பா உமாநாத் சொந்த வாழ்க்கையையும், பொது வாழ்க்கையையும் ஒன்றாக இணைத்து ஒட்டு மொத்த மக்களின் நலனை முன்வைத்து வாழ்ந்து காட்டியவர். அந்த வகையில் அவரை பின்பற்றி நம்முடைய வாழ்க்கையை பொதுமக்களுக்காக வாழ்ந்து காட்டுவது தான் நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலி ஆகும் என்றார்.  நிகழ்ச்சியில் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், ரெங்கராஜன், சிவராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், அன்வர், பழனிசாமி,  அபிஷேகபுரம் ஒன்றியச் செயலாளர் வேலுச்சாமி, திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் நடராஜன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் உ.நிர்மலாராணி, மாநகர் மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, மாவட்டத் தலைவர் ரேணுகா, புறநகர் மாவட்ட செயலாளர் மல்லிகா, மாவட்டத் தலைவர் லிங்கராணி, தீக்கதிர் திருச்சி பதிப்பு மேலாளர் பன்னீர்செல்வம் உள்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், பகுதிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  முன்னதாக தோழர் பாப்பா உமாநாத்தின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி செவ்வணக்கம்  செலுத்தப்பட்டது. பொன்மலை பகுதிக்குழு செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்