tamilnadu

img

அறம் மக்கள் நலச் சங்க கூட்டம்

 

திருச்சிராப்பள்ளி: தஞ்சையில், அறம் மக்கள் நலச் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சங்க தலைவர் டாக்டர் சு.ராஜா தலைமையிலும், பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.  கூட்டத்தில் ஏழை மக்களின் நலனுக்காக திருச்சியில் அதிநவீன வசதிகளை கொண்ட மருத்துவமனை (மல்டி ஸ்பெசாலிட்டி) கட்ட மார்ச் மாதம் அடிக்கல் நாட்டுவது. அரசு பள்ளி மாணவர்களுக்கு சங்கத்தின் சார்பில் ஆண்டிற்கு ஒரு முறை 2 சீருடைகள், தேவையான உபகரணங்கள் வழங்குவது. நலிவடைந்த மக்களுக்கு செய்யப்பட்டு வரும் பல்வேறு உதவிகளை விரிவுப்படுத்தும் வகையில் அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அறம் மக்கள் நலச் சங்கத்தினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.