tamilnadu

img

பாஜக - அதிமுக கூட்டணியை முறியடிக்க வேண்டும்

தஞ்சாவூர், ஏப்.10 - பாஜக, அதிமுக கூட்டணியை மக்கள் முறியடிக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தா. பாண்டியன்.தஞ்சாவூர் ஆட்டு மந்தைத் தெருவில் திமுகவை சேர்ந்த மக்களவைத் தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சட்டப்பேரவைத் தொகுதிவேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகத்தை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:கஜா புயல் வீசியதால் தமிழகத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வராத பிரதமர் மோடி இப்போது வாக்குக் கேட்டு வருகிறார். அவரைவீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர்.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாலியல் சம்பவங்கள், கொலைகள் நிகழ்கின்றன. அதைத் தடுக்கஎந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பாஜக-அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நமக்குவருங்காலம் இல்லை. நமது குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களைச் செய்ததாகக் கூறுகிறார். அவர் செய்த எந்தத்திட்டமும் மக்களைச் சென்றடைந்ததில்லை. தமிழகத்தில் கருணாநிதிக்குபிறகு அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளையும் ஒரே கூட்டணியில் கொண்டு வந்த பெருமை மு.க. ஸ்டாலினையே சாரும். அவர் இத்தேர்தலுக்குப் பிறகுமுதல்வராவார். இதேபோல, மத்தியில் ராகுல் காந்தி பிரதமராவார். நேர்மை, நாணயம், மக்கள் மீது அன்பு உள்ளவர்கள்தான் நாட்டின் பிரதமராக வர வேண்டும். ஆனால், அவையெல்லாம் மோடிக்கு கிடையாது. எனவே, திமுக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் தஞ்சாவூர் சட்டமன்றதொகுதி வேட்பாளர் டி.கே.ஜி.நீலமேகம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

;