tamilnadu

img

கந்துவட்டிக் கொடுமை பெரம்பலூர் ஆட்சியரகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர்,  ஜூலை 8- கந்துவட்டிக் கொடு மையால் பாதிக்கப்பட்ட தொழிலாளி காவல்துறை யை கண்டித்தும், கந்து வட்டிக்காரர்கள் மீது நட வடிக்கை எடுக்க வலி யுறுத்தியும் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக் குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் முத்து நகரை சேர்ந்தவர் தங்கவேல் மகன் விஜயகுமார்(35). பிளம்பிங் தொழிலாளி. பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் கருப்பையாவிடம் ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் வட்டிக்கு விஜயகுமார் வாங்கியுள்ளார். பின்னர் விஜயகுமார் வாங்கிய கடன் தொகைக்கு வட்டி தொகையையும் சேர்ந்து இதுவரை 24 லட்ச ரூபாயை கருப்பையாவிடம் கொடுத்துள்ளாராம். கடன் பணம் முழுவதையும் கட்டி முடித்த பிறகும் விஜயகுமாரிடம் பெற்ற செக், கடன் பத்திரம் போன்றவற்றை கருப்பையா தர மறுத்ததோடு, கொலை மிரட்டல் விடுத்து வருகிறாராம்.  இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து தனது செக் புத்தகம், கடன் பத்திரம் ஆகியவற்றை பெற்றுத் தர நட வடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பி அலுவலகத்தில் கடந்த ஜூன் 3-ம் தேதி விஜயகுமார் புகார் கொடுத்தார். ஆனால் எந்த வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் கருப்பையா மருமகனான தஞ்சாவூரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் கடன் பத்திரத்தை வைத்துக் கொண்டு விஜய குமாருக்கு கோர்ட் நோட்டீஸ் விடுத்ததோடு, கொலை மிரட்டல் விடுத்தாராம். இதனால் மனமுடைந்த விஜயகுமார், புகாரில் நட வடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும், கத்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திங்களன்று  பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி விஜயகுமார் தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் விரைந்து சென்று விஜயகுமாரை காப்பாற்றி மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.