தஞ்சாவூர், ஜூன் 24- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முகை தீன் கல்லூரி நடப்பு கல்வியாண்டில் இளங்கலை முதலாம் ஆண்டில் இணைந்த மாணவ, மாணவிகளுக்கான வர வேற்பு மற்றும் வகுப்புகள் தொடக்க விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ.அபுல் ஹசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் பேசினார். முன்னதாக பேராசிரியர் ஏ.எம்.உதுமான் முகையதீன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகளை பேராசிரியர் மேஜர் பி.கணபதி தொகுத்து வழங்கி விழா நிறைவில் நன்றி கூறி னார். விழாவில் கல்லூரி துணை முதல்வர்கள் எம்.முகமது முகைதீன், என்.ஏமுகமது பாருக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.