tamilnadu

கோரையாற்று பாலத்தை அகலமாகவும் உயரமாகவும் கட்டக் கோரி சிபிஎம் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.8- திருச்சி அரைவட்ட சுற்றுச்சாலைக்காக பஞ்சப்பூர் அருகே கோரையாற்றின் குறுக்கே  பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பால த்தை கிழக்கில் இருந்து மேற்காக நிர்ண யிக்கப்பட்ட 250 மீட்டர் அகலத்திற்கு பதிலாக  70 மீட்டர் அகலத்தில் கட்டுவதால் மழைக்கா லத்தில் பஞ்சப்பூர், செட்டியப்பட்டி பகுதி மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் அபா யம் உள்ளது. எனவே இந்த பாலத்தை அகல மாகவும், உயரமாகவும் கட்ட வேண்டும் என கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அபி ஷேகபுரம் பகுதிக்குழு சார்பில் பாலம் வேலை நடைபெற்று வரும் கோரையாற்றில் தரை யில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. கட்சியின் அபிஷேகபுரம் இடைகமிட்டி செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், பகுதிக்குழு உறுப்பினர்கள் கலந்து  கொண்டனர். காலையில் தொடங்கிய இந்த  போராட்டம் மாலை வரை நடைபெற்றது. பின்னர் ஆர்டிஓ தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண்பது என முடிவானது இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.