tamilnadu

img

விவசாய மண் பரிசோதனை

சீர்காழி, மே 9-நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்குவதற்காக கொள்ளிடம் மற்றும் சீர்காழி வட்டார கிராமங்களிலும் மதிப்பீடு மற்றும் தரக்கட்டுப்பாடு மண் மாதிரி சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொள்ளிடம் வட்டார மற்றும் சீர்காழி பொறுப்பு வேளாளர் உதவி இயக்குநர் சுப்பையன் தலைமை வகித்தார். மாவட்ட மண் ஆய்வு கூட வேளாண் அலுவலர் கவுதமி, மண் மாதிரி சேகரித்தலை துவக்கி வைத்தார்.வேளாண் அலுவலர்கள் விவேக் சின்னக்கண்ணன், துணை வேளாண் அலுவலர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மண் மாதிரி சேர்த்தல் பணியில் கொள்ளிடம் மற்றும் சீர்காழி பகுதி வேளாளர் அலுவலர்கள் 80 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

;