tamilnadu

img

பாதுகாப்புத் துறையை தனியார்மயமாக்குவதை கைவிடுக! அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.29- பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை கைவிட வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய் அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், மாநகர் மாவட்ட பொருளாளர் வி.கே.ராஜேந்திரன், புறநகர் மாவட்ட பொருளாளர் சம்பத், ஒஎப்டி ஒருங்கிணைப்புக் குழு ராஜ்குமார், பிஎஸ்என்எல்இயு மாவட்ட செயலாளர் அஸ்லம்பாஷா, எல்ஐசி சங்க மாவட்ட செயலாளர் ஜோன்ஸ், தபால் சங்க செல்வன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆரோக்கியராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வளன்அரசு, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சிராஜூதீன், பெல் சிஐடியு சங்க அருணன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் சங்க பஷீர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.