விருதுநகர், மார்ச் 22- ஒன்றிய மோடி அரசின் தேசவிரோத மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து நடைபெற உள்ள மார்ச் 28 29 பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்யும் வகையில் விருது நகர் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் விருதுநகரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இப்போட்டத்திற்கு தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் மாடசாமி தலைமையேற்றார். சிஐ டியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, எம்எல்எப் தலை வர் காதர் முகைதீன், பரசுராமன், சிஐடியு சார்பில் ஜி.வேலுச்சாமி, எம்.வெள்ளத்துரை, எம்.சாராள் பரமசிவம், பி.ராமர், எம்.கார்மேகம், கே.முருகன், எல்பிஎப் சார்பில் ராஜசெல்வம், அண்ணாதுரை ஏஐடியுசி சார்பில் பாண்டியன், டிடிஎஸ்எப் சார்பில் விஜய பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.