14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும், தொழிலாளர்களிடமிருந்து எல்ஐசி சொசைட்டி, பிஎப் மற்றும் இதர இனங்களில் பிடித்தம் செய்த ரூ.8000 கோடியை உரிய இனத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலூர் மண்டல அலுவலகம் முன்பு தொமுச பொதுச் செயலாளர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவராஜ், பன்னீர்செல்வம் (தொமுச), காசிநாதன், ரவிச்சந்திரன் (சிஐடியு), ராமதாஸ் (ஏஐடியுசி), தண்டபாணி (டிடிஎஸ்எப்), சந்திரசேகரன் (எச்எம்எஸ்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.