tamilnadu

img

புளியஞ்சோலை ஆற்று நீர் வீணாவதை தடுக்க அணை கட்டப்படும்

திருச்சிராப்பள்ளி, ஏப்.7-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் சனிக்கிழமை துறையூர் சட்டமன்ற தொகுதி உப்பிலியபுரம் ஒன்றியம் டி.மங்கப்பட்டி, மங்கப்பட்டிபுதூர், டி.பாதர்பேட்டை, முருங்கப்பட்டி, புளியஞ்சோலை,எரகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார்.வாக்குச் சேகரிப்பின் போது பாரிவேந்தர் பேசியதாவது:துறையூர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்கள் பயன் பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம்செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். புளியஞ்சோலை ஆற்று நீரானது அயாற்றில் கலந்து வீணாவதை தடுக்க அணைக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய விளை பொருட்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதிமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் ஜம்பு ஏரி முழுமையாக தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும். பெரம்பலூர் தொகுதிக்கு தேவையான திட்டங்களை பெற்று தருவேன் என்றார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பழநிசாமி, உப்பிலியாபுரம்ஒன்றியச் செயலாளர் முத்துக் குமார், மாற்றுத்திறனாளிகள் சங்கமாவட்டச் செயலாளர் ரவி, சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்,திமுக ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

;