தஞ்சாவூர் மே.31-தஞ்சாவூரில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஜூன் 8, 9-ம் தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. 8-ல் முதல் தாள் தேர்வில் தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் 2615 தேர்வர்களும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் 1860 தேர்வர், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் 1526 தேர்வர்களும் எழுதவுள்ளனர். 9-ம் தேதி இரண்டாம் தாள் தேர்வில் தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் 6641 தேர்வர்களும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களில் 5589 தேர்வர், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 9 தேர்வு மையங்களில் 3786 தேர்வர், ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் 629 தேர்வர்களும் எழுதவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சாந்தா உள்பட பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.