tamilnadu

ஈழவா மற்றும் தியா சமுதாய மக்கள் சாதிச்சான்றிதழ் பெற ஆவணங்கள் கோரப்படுகின்றன

திண்டுக்கல், மே 21- ஈழவா மற்றும் தியா சமுதாய மக்கள் சாதிச்சான்றிதழ் பெற உரிய ஆவணங்க ளைப் சமர்ப்பிக்க வேண்டும் என்று திண் டுக்கல், மதுரை ஆட்சியர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.  ஈழவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்றிதழ் வழங்கக் கோரும் முறையீடுகளை ஆரா ய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற் காக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளரை தலைவராக நியமித்து நான்கு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.

சாதிச்சான்றிதழ் பெறுவது தொடர்பாக கோரிக்கைகள், முறைகேடுகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்புவோர் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அல்லது குழுவின் உறுப்பினரான செயலர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர், எழிலகம் விரிவாக்க கட்ட டம், 2ம் தளம், சேப்பாக்கம், சென்னை-5, எனற் முகவரிக்கு வருகிற மே 26-ஆம் தேதிக் குள் எழுத்துப் பூர்வமாக தபால் அல்லது மின்னஞ்சல் மூலமாக அளிக்க வேண்டும்.  இது தொடர்பாக விபரங்களுக்கு திண் டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளா கத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவல ரையும், மதுரை மாவட்டததில் வசிப்பவர்கள் மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற் றும் சிறுபான்மை நல அலுவரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.