திண்டுக்கல், மே 11- திண்டுக்கல் மேற்கு தாலுகாவில் உள்ள கட்டசின்னான்பட்டி, ரெட்டியார்சத்திரம், கோனூர், வெள்ளம்பட்டி, புதுப்பட்டி, போத்திநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஒட்டன்சத்திரம் தாலுகா கே.கீரனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோகுல் மனிதம் நண்பர்கள் பங்களிப்போடு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர் பழனிச்சாமி, செயலாளர் கந்தசாமி, மாவட்ட துணை செயலாளர் தங்கவேல் மற்றும் மாவட்ட செயலாளர் பகத்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.