tamilnadu

img

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கு... கே.பாலபாரதி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இந்தாண்டு துவக்கத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகமனிதச் சங்கிலி போராட்டத்தில்ஈடுபட்ட சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மெர்சி ஃபவுண்டேசன் இயக்குநர் மெர்சி செந்தில்குமார், சிபிஎம் மாவட்டச் செயலாளர்ஆர்.சச்சிதானந்தம், திண் டுக்கல் ஒன்றியச் செயலாளர் அஜாய்கோஷ், ஒன்றியக் குழு உறுப்பினர் சரத்குமார், மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பாளர் வருணன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் அரபுமுகமது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நகரச் செயலாளர் கே.எஸ்.கணேசன். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வனஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமாவட்டத்தலைவர் விஷ்ணுவர்த்தன் மற்றும் சர்புதீன், உள்ளிட்ட பலர் மீது திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு புதனன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனையொட்டி அனைவரும் ஆஜரானார்கள். (நநி)