tamilnadu

img

வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதர் சங்கம் நிவாரணம்

தருமபுரி, ஜூன் 14- தருமபுரி நகரத்தில் வீட்டு வேலைசெய்யும் தொழிலாளர்கள் குடும்பத்துக்கு கொரோனா நிவார ணமாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் உணவுப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட் டது. தருமபுரி மாவட்டம், நகரப் பகு தியில் ஏராளமான பெண்கள் வீட்டு வேலைசெய்து அதில் கிடைக்கும் சிறுவருவாயை வைத்து குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கொரோனா பாதிப்பால் கடந்த 3 மாதகாலமாக வேலையின்றி தவித்து வந்தனர். இந்நிலையில் வீட்டுவேலைசெய்யும் தொழிலா ளர்களுக்கு உதவிடும் வகையில் அனைத்திந்திய ஜனாநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நிவாரணமாக உணவுப் பொருட்கள் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, வீட்டுவேலை செய்யும் 30 பெண் தொழிலாளர்க ளுக்கு 5 கிலோ அரிசி, தலா ஒரு கிலோ பருப்பு, எண்ணெய் அடங் கிய உணவுப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில், அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்க மாவட்ட செரலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட துணைத்தலைவர் கே.பூபதி நகர செயலாளர் நிர்மலாராணி ஆகி யோர் உள்ளிட்ட பலர் பங்கேற்று வழங்கினர்.

;