தருமபுரி, நவ.13- தருமபுரியில் குடிநீர் தட்டுப்பாட்டால், புதனன்று குடிநீர் லாரியை சிறை பிடித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி ஏ.எஸ்.டி.சி. நகரில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நகராட்சி நிர்வாகம் மேற் கொண்ட கால்வாய் சீரமைப்பு பணியின் போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் கடந்த ஒரு மாத கால மாக அப்பகுதிக்கு லாரி மூலம் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகிக்கப் பட்டது. தற்போது வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே லாரியின் மூலம் குடிநீர் விநியோ கிக்கப்படுகிறது. இதுவும் மிக குறைந்த அளவே விநியோகிக்கப்படுகிறது. இத னால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிர மத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் புதனன்று நகராட்சியில் இருந்து மற்ற பகுதிக்கு லாரி மூலம் குடிநீர் கொண்டு சென்றனர். இதையறிந்த அப் பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நகராட்சி அலுவலர்கள் அப்பகுதி பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தினமும் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.