tamilnadu

img

மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால் 10 கோடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் - அ.சவுந்தரராஜன்

தருமபுரி, ஜூன் 16- மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால் 10 கோடி தொழிலாளர்கள் பாதிக் கப்படுவர். ஆகவே, இச்சட்டத் திருத்தத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம் என சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராஜன்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக, தருமபுரியில்  நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தல்முடிந்த பிறகு  மத்திய அரசு கூறியுள்ள சட்டத் திருத்த அறிவிப்பானது தொழி லாளர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தால் சுமார் 10கோடி பேருக்கு பாதிப்பு ஏற்படும். 44 தொழிலாளர் உறவு சட்டங்களை 4 பிரிவுகளாக பிரித்து சுருக்கி முதலாளிகளுக்குச் சாதகமாக சட்டத் தைமாற்றுகின்றனர். இந்த சட்ட  திருத்தத்தால் கார்ப்பரேட் கம்பெனி களுக்கும், வெளிநாட்டு முதலாளி களுக்கும் சாதகமாக அமையும். ஆகவே, இதை எதிர்த்து சிஐடியு உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் தொடர்ந்து போராடும் என்றார்.

நீர்நிலைகளை பாதுகாத்திடுக
மேலும் அவர் கூறுகையில், தொடர் வறட்சியினால் தமிழ கத்தில் கடுமையான குடிநீர் பிரச் சனை நிலவுகிறது. தண்ணீர் இல் லாததால் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லை. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும் மத்திய பாஜக மோடி அரசு தமிழகத்துக்கு தண்ணீர் விட  மறுக்கிறது. தற்போது நிலத்தடி  நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ்  சென்று விட்டது. தமிழ கத்தில்75 ஒன்றியங்களில் நீர்நிலை கள் அபாயகரமாக உள்ளது. அதேநேரம்,நீர்நிலைகளைப்பாதுகாக்கவும், நீர்மட்டத்தை மேம்படுத்ததமிழக அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, நீர்நிலைகளை மேம்படுத்த  உடனடியாகமத்திய, மாநிலஅரசு கள் நிதி ஒதுக்க வேண்டும்

வேலைவாய்ப்பை உருவாக்கிடுக
இதேபோல், தருமபுரியில் சிப் காட் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், பின்தங்கிய தருமபுரி மாவட்டத்தில் சிப் காட் அமைப்பதற்கான எந்த  நடவடிக்கையும் அரசு எடுக்க வில்லை. கிராமப்புற இளைஞர்கள் வேலை தேடி பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலைமை உள்ளது. எனவே அரசு  சிப்காட் அமைப்பதற்கான நடவ டிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.  மேலும், விவசாயம் கடுமை யாகபாதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் விவசாய உற்பத்தி சார்ந்த தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். குறிப்பாக மாம்பழம் விளைச்சல் உள்ளது. மாம்பழக்கூழ் உற்பத்தி தொழிற்சாலை, அதே போல், பூ சாகுபடி அதிகமாக உள்ள நிலையில், பூ உற்பத்தியை வைத்து வாசனை திரவிய தொழிற் சாலையை உருவாக்கவேண்டும்.

குறைந்தபட்ச கூலியை உறுதிசெய்திடுக 
ஆஷா திட்டத்தில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு மாதம்  ரூ.610மட்டும் வழங்கப்படுகிறது. இச்சூழலில் இந்த பணியாளர் களுக்கு கடந்த 6 மாதமாகச் சம்பளம் வழங்கவில்லை. இவர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி, மாதந் தோறும் ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும், கார்மென்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த கூலி வழங்கப்படுகிறது. இதுகுறித்து தொழிற்சங்கம் புகார் அளித்தால் தொழிலாளர் நலத் துறை முறையான நடவடிக்கை எடுப்பதில்லை. ஆகவே, தொழி லாளர்களுக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்சக் கூலி கிடைக்க அரசு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், தொழிற்சங்கம் அமைத்தால் தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்கும் போக்கு தொடர்கிறது. தருமபுரி சரவணா ஸ்பின்னிங் மில், இண்டிகரா கிரானைட் கம்பெனி ஆகிய வற்றில்  தொழிற்சங்கம் அமைத்ததால் தொழிலாளர்கள் பழிவாங்கப் பட்டுள்ளனர். தொழிலாளர் நலத் துறை தொழிலாளிகள் பக்கம் நின்றுதொழிற்சங்க உரிமையைப் பாதுகாக்கவும், தொழிலாளியைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிடுக
இதேபோல், அங்கன்வாடி களில் எல்கேஜி வகுப்புகள் தொடங்குவதாக அரசு அறிவித் துள்ளது. அங்கன்வாடி பணியாளர் களுக்கு முறையான பயிற்சி வழங்கி  எல்கேஜி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கி, காலமுறை ஊதியம்  வழங்க வேண்டும். மேலும், 24  மணிநேரமும் வர்த்தக நிறுவ னங்கள் செயல்படலாம் என அரசு  அறிவித்துள்ளது. இந்த அறிவிப் பின் படிசெய்யப்பட்டால் 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும். பெண்களை 8 மணிக்கு மேல் பணியில் அமர்த்தக்கூடாது. பெண்கள் இரவுநேரங்களில் வேலை செய்ய சம்மதித்தால் பாது காப்பை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அ.சவுந்தரராசன் தெரி வித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன், மாவட்ட தலைவர் ஜி.நாகராஜன், மாவட்ட செயலாளர் சி.நாகராசன், சிஐடியு மாவட்ட மாநாட்டு வரவேற்பு குழு  தலைவர் எம்.சுருளிநாதன் ஆகி யோர் உடனிருந்தனர்.