tamilnadu

img

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு மத்திய அரசைக் கண்டித்து மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக. 2-  புதிய கல்விக் கொள்கை 2020ஐ ரத்து செய்யக்கோரி தருமபுரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மத்திய அரசு முன்மொழிந்த புதிய கல்விக் கொள்கைக்கு  பெரும் பாலான கல்வியாளர்கள், அறிஞர் கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தி ருந்தன. மேலும் பல்வேறு மாநில அர சுகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித் துள்ளன. இந்நிலையில், புதியக்  கல்வி கொள்கையை நடைமுறைப் படுத்த மத்திய அமைச்சரவைக் கூட் டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்நடவடிக்கை யைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன இயக்கத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், மாரவாடி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் நா. தமிழமுதன், மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், நவநீத கிருஷ்ணன், ஆ.அருள்முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசிற்கு எதிரான முழக்கங் களை எழுப்பினர்.

;